NewsNSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

-

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான்.

ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம் நிகழ்ந்துள்ளது. அதே நேரத்தில் மற்றொரு நபரை இன்னும் காணவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு ராக்ஸ் கடற்கரையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஒன்பது வயது குழந்தை பாறைகளுக்கு இடையில் சிக்கியிருப்பதாக அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவசர சேவைகள் குறித்த இடத்திற்கு விரைந்து அவரை மீட்டெடுத்தனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், நேற்று காலை சிட்னியின் தெற்குப் பகுதியில் கடலில் அடித்துச் செல்லப்பட்டதில் ஒரு மீனவர் உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஈஸ்டர் தினத்தன்று நீரில் மூழ்கி உயிரிழந்த 6வது நபர் இவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நியூ சவுத் வேல்ஸில் 50 பேர் மீட்கப்பட்டதாகவும், புனித வெள்ளிக்குப் பிறகு சுமார் நூறு உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் மீட்புக் குழுக்கள் தெரிவித்தன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...