பிரேசிலில் ஏழு வயது சிறுவன் விஷம் கலந்த ஈஸ்டர் சாக்லேட் முட்டைகளை சாப்பிட்டு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஒரு பிரேசிலியப் பெண் தனது முன்னாள் கணவரின் புதிய காதலிக்கு இந்த விஷ ஈஸ்டர் முட்டைகளை அனுப்பியுள்ளார்.
விசாரணைகளில், சம்பந்தப்பட்ட 35 வயது பெண் பழிவாங்கும் நோக்கில் இதைச் செய்ததாக தெரியவந்துள்ளது.
இந்தப் பார்சல் ஒரு மோட்டார் சைக்கிள் கூரியர் சேவையால் அனுப்பப்பட்டது. மேலும் அந்தப் பெண் அதை தொலைபேசி மூலம் பெற்றதை உறுதிப்படுத்தியிருந்தார்.
பார்சலைப் பெற்ற பெண் தனது குழந்தைகளுக்கு சாக்லேட் முட்டைகளை விநியோகித்ததாகவும், முட்டைகளை சாப்பிட்ட பிறகு அவரது மகன் மிகவும் நோய்வாய்ப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவரது 13 வயது மகள் இன்னும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சாக்லேட் முட்டைகளுக்கான ரசீதுகள், இரண்டு விக், கத்தரிக்கோல், அட்டைகள், ஒரு ரம்பம் மற்றும் சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் அவளிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.