Newsஇலங்கையில் மண்ணெண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு - மக்கள் கடும் எதிர்ப்பு

இலங்கையில் மண்ணெண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு – மக்கள் கடும் எதிர்ப்பு

-

மண்ணெண்ணெய் விலையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யின் விலை 87 ரூபாவாக இருந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 253 ரூபாவால் விலை அதிகரிப்பு இடம்பெற்றது.

இதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலையாக 340 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்புக்கு மீனவர்கள் உட்பட பல தரப்பினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

சமையல் எரிவாயுவின் விலை 5 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது, எனவே, மண்ணெண்ணெய் அடுப்புதான் பயன்படுத்தி வந்தோம், தற்போது அதன் விலையும் உச்சம் தொட்டுள்ளது. மின்சார கட்டணமும் அதிகரித்துள்ளதால், என்ன செய்வதென்று தெரியவில்லை என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மண்ணெண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் என வியாபார தரப்பு தெரிவிக்கின்றது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...