Newsகனடா வரலாற்றில் முதல் முறை நீதி அமைச்சராக பதவியேற்ற ஈழத்தமிழர் கெரி...

கனடா வரலாற்றில் முதல் முறை நீதி அமைச்சராக பதவியேற்ற ஈழத்தமிழர் கெரி ஆனந்தசங்கரி!

-

கனடா வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான கெரி ஆனந்தசங்கரி நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே கெரி ஆனந்தசங்கரி.

இலங்கையில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையை அடுத்து, தனது 13 ஆவது வயதில் புலம்பெயர்ந்து அவர் கனடா சென்றார்.

கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள் சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.

அத்தோடு, கனடா தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளிலும் அவர் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார்.

இந் நிலையில், கனடாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக கெரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகியிருந்தார்.

இந்நிலையில் கனடாவின் 24 ஆவது பிரதமராக மார்க் கார்னி நேற்று பதவியேற்றார்.

அதன்படி புதிய அமைச்சரவை பதவியேற்பின்போது கெரி அனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராகவும், அட்டர்னி ஜெனரலாகவும், மற்றும் கிரவுன் – இனிஜினஸ் ரிலேஷன்ஸ் மற்றும் வடக்கு விவகாரங்கள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்

Latest news

நிர்வாணமாக தூங்குவதால் கிடைக்கும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்

நிர்வாணமாக தூங்குவதால் ஏற்படும் அற்புதமான நன்மைகளை ஒரு உயர் மருத்துவர் வெளிப்படுத்தியுள்ளார். Buff லைனில் தூங்குவது சிறந்த இரவு தூக்கத்தை அளிப்பதாகவும், பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளின்...

பிரதமர் அல்பானீஸை சந்தித்தார் ஜனாதிபதி டிரம்ப்

கூட்டாட்சித் தேர்தலுக்குப் பிறகு வர்த்தகம் மற்றும் கட்டணங்கள் குறித்து பிரதமர் அந்தோணி அல்பானீஸுடன் பேசுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில்...

விமானங்களில் Power bank-களுக்கு தடை!

பிரிட்டிஷ் பயணிகள் தங்கள் பொருட்களில் பவர் பேங்குகளை வைக்க வேண்டாம் என்று இங்கிலாந்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்துள்ளது. ஏனென்றால், பழுதடைந்த, தவறாகப் பயன்படுத்தப்பட்ட லித்தியம்...

ஆஸ்திரேலிய தேர்தலில் 4 மில்லியனைத் தாண்டிய வாக்காளர்கள்

முந்தைய தேர்தல்களை விட ஆஸ்திரேலியர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, 4.03 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில்,...

விமானங்களில் Power bank-களுக்கு தடை!

பிரிட்டிஷ் பயணிகள் தங்கள் பொருட்களில் பவர் பேங்குகளை வைக்க வேண்டாம் என்று இங்கிலாந்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்துள்ளது. ஏனென்றால், பழுதடைந்த, தவறாகப் பயன்படுத்தப்பட்ட லித்தியம்...

ஆஸ்திரேலிய தேர்தலில் 4 மில்லியனைத் தாண்டிய வாக்காளர்கள்

முந்தைய தேர்தல்களை விட ஆஸ்திரேலியர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, 4.03 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில்,...