Newsகடன் பெற்று Crypto-வில் முதலீடு செய்ய தடை விதித்த பிரபல நாடு

கடன் பெற்று Crypto-வில் முதலீடு செய்ய தடை விதித்த பிரபல நாடு

-

பிரித்தானிய அரசு, பொதுமக்கள் கடனில் பெற்ற பணத்தை பயன்படுத்தி கிரிப்டோகரன்சிகளை வாங்கும் செயலுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணய சந்தையை கட்டுப்படுத்தப்பட உள்ளது.

Financial Conduct Authority (FCA) எனும் நாட்டு நிதி மேற்பார்வை அமைப்பு, கிரிப்டோ முதலீடுகளை கட்டுப்படுத்த புதிய விதிகளை உருவாக்கி வருகிறது.

கடந்த 2022-ல் கிரிப்டோ வாங்க கடன் பயன்படுத்தியவர்கள் 6 சதவீதம் இருந்ததென யூகோவ் சர்வே தெரிவிக்க, 2023-ல் இது 14 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடனில் வாங்கப்படும் முதலீடுகள் நஷ்டமடையும் போது, பொதுமக்கள் தங்கள் சொத்துகளை இழக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று மோசமான நிதி நடத்தைகள் சூதாட்டத்தை ஒத்ததாகும் என நாடாளுமன்ற குழு கண்டறிந்துள்ளது.

இந்நிலையில், ரிடெயில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு மற்றும் சந்தை நம்பிக்கையை உறுதி செய்ய, சட்ட நடவடிக்கைகள் மூலம் FCA இப்போது அனைத்து கிரிப்டோ நிறுவனங்களையும் மேற்பார்வைக்கு கொண்டு வரவுள்ளது.

முக்கியமாக, கிரிப்டோ டிரேடிங் தளங்கள், இடைத்தரகர்கள் மற்றும் கிரிப்டோ கடன் நிறுவனங்களும் இதில் அடங்கும்.

பிரித்தானிய நிதியமைச்சர் ரேசல் ரீவ்ஸ் மற்றும் FCA தலைவர் நிகில் ராதி, சில தளங்களில் ஒழுங்குமுறை சலுகை அளிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் சந்தை நம்பிக்கையையும் வலுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த முயற்சி, நாட்டு வளர்ச்சிக்கும், நிதி நிலைத்தன்மைக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் வாகன உரிமையாளர்கள் இரண்டு முறை வரி செலுத்த வேண்டுமா?

வரும் நாட்களில் விதிக்க திட்டமிடப்பட்டுள்ள சாலை பயனர் வரி, மின்சார வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் கூறியுள்ளார். அதன்படி, பெட்ரோல் வாகன பயனர்களுக்கு...

விக்டோரிய மக்களுக்கு $4 மில்லியன் மதிப்புள்ள இலவச பயிற்சி வகுப்புகள்

விக்டோரியன் அரசு, ஊழியர்களுக்கும் வணிகங்களுக்கும் தேவையான டிஜிட்டல் திறன்களை வழங்குவதற்காக ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, $4.2 மில்லியன் டிஜிட்டல் வேலைகள் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இப்போது...

விக்டோரியாவில் 1000 புதிய வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று கிறிஸ்துமஸுக்கு முன்பு 3,500 க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்த தயாராகி வருகிறது. Australia Post தனது பணியாளர்களை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த...

LGBTQ சமூகத்தை ஆதரிக்க விக்டோரியன் அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கை

வன்முறை மற்றும் துன்புறுத்தலை அனுபவிக்கும் விக்டோரியன் LGBTQ சமூகங்களை ஆதரிப்பதற்காக விக்டோரியன் அரசாங்கம் ஒரு புதிய ஆதரவு சேவையைத் தொடங்கியுள்ளது. இந்தப் புதிய சேவை 'Switchboard Victoria'...

சர்க்கரை இல்லாமல் காபி குடித்தால் உடலுக்கு நல்லதா?

Caffeine கலந்த காபி குடிப்பதால் ஆயுட்காலம் அதிகரிப்பதாகவும், இதய நோயால் ஏற்படும் இறப்பு அபாயத்தைக் குறைப்பதாகவும் புதிய ஆய்வு ஒன்று தெரியவந்துள்ளது. Tufts பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதைக்...

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்ட இரு தொல்பொருள் பொருட்கள்

உக்ரைனில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்ட இரண்டு தொல்பொருள் பொருட்கள் உக்ரைனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. உக்ரைனின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சிட்னியில் நடந்த விழாவில்...