வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக சோவியத் யூனியன் 1972ம் ஆண்டு அனுப்பப்பட்ட காஸ்மோஸ் 482 எனும் விண்கலம் அதிக வெப்பத்தை தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஆனால் டைமர் கோளாறு காரணமாக இது வெள்ளி கிரகத்திற்கு போகாமல் பூமியை சுற்ற தொடங்கியது. எவ்வளவோ முயன்றும். வெள்ளி கிரகத்திற்கு இந்த விண்கலத்தை அனுப்ப முடியவில்லை. சுமார் 50 ஆண்டுகளுக்கும மேலாக பூமியை சுற்றி வரும் இந்த விண்கலம் தற்போது பூமியில் விழுவதற்கான நேரம் நெருங்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மே 8 ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை இது பூமியின் மீது மோதும். வழக்கமாக பூமியின் வளிமண்டலத்தில் எந்த பொருள் நுழைந்தாலும் அது எரிந்த சாம்பலாகிவிடும். ஆனால் காஸ்மோஸ் 482 எனும் விண்கலத்தின் அவ்வாறு எரியாது.
மாறாக அப்படியே முழுதாக வந்து விழும் என்பதால் இது தொடர்பில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 453 KG எடை கொண்ட இது மணிக்கு 240 கி.மீ வேகத்தில் பூமியில் விழ இருக்கிறது. இது விழுந்த இடத்தில் கட்டிடங்கள் இருந்தால் தரைமட்டம் ஆகிவிடும். காடு இருந்தால் காட்டுத்தீ ஏற்படும். கடலில் விழுந்தால் ஆபத்து குறைவு என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் வடக்கு 52 டிகிரி கோணத்தில் தொடங்கி, தெற்கு 52 டிகிரி கோணத்தில் இந்த விண்கலம் விழும். என தெரிவிக்கப்படுகிறது.
அதாவது,
நியூயோர்க் – அமெரிக்கா
லண்டன் – இங்கிலாந்து
பாரீஸ் – பிரான்ஸ்
டோக்கியோ – ஜப்பான்
பெய்ஜிங் – சீனா
சிட்னி – அவுஸ்திரேலியா
சான்டியாகோ – சிலி
ஜோஹன்பர்க் – தென்னாப்பிரிக்கா
இந்த நகரங்களுக்கு அருகில் விண்கலம் விழலாம் என தெரிவிக்கப்படுகிறது.