நகரின் முக்கிய புறநகர்ப் பகுதியில் ஒரு கங்காருவை கொடூரமாகக் கொடுமைப்படுத்தியதாகக் கூறி, இரண்டு ஆண்கள் மீது போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏப்ரல் 23 ஆம் திகதி இரவு 10.20 மணியளவில் லிஸ்டர்ஃபீல்ட் தெற்கில் உள்ள ஹலாம் நார்த் சாலையில் வேண்டுமென்றே காரை ஓட்டிச் சென்று கங்காருக்கள் கூட்டத்தில் மோதியதாக போலீசார் குற்றம் சாட்டுகின்றனர்.
கங்காருக்களில் ஒன்று சம்பவ இடத்திலேயே இறந்தது.
காரில் இருந்து இறங்கி உயிரற்ற விலங்கைக் கையாளுவதற்கு முன்பு, அந்த மனிதர்கள் கங்காருக்களைத் தாக்கியதாகக் கூறப்படும் தருணத்தின் காட்சிகள் CCTV கேமராக்களில் பதிவாகியுள்ளன.
ஸ்கோர்ஸ்பியைச் சேர்ந்த 22 வயது இளைஞரும், ரிங்வுட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
விலங்குகளை கொடுமைப்படுத்துதல் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளன.
அவர்கள் ஆகஸ்ட் 19 அன்று டான்டெனாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.