Newsநச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

-

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன.

மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து, சுமார் 4,500 சதுர கிலோமீட்டர் (3,400 சதுர மைல்கள்) பரப்பளவை எட்டியுள்ளது. இது கிட்டத்தட்ட கங்காரு தீவின் அளவை எட்டியுள்ளது.

மீன்கள் மற்றும் சுறாக்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் காரணிகளாகச் செயல்படும் நச்சுப் பொருட்களை இந்தப் பாசிகள் உற்பத்தி செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

OzFish-இன் SA திட்ட மேலாளர் பிராட் மார்ட்டின் கூறுகையில், பாசிப் பூக்கள் அசாதாரணமானது அல்ல, ஆனால் தற்போதைய நிகழ்வு கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்துகிறது.

பாசிகளால் உற்பத்தி செய்யப்படும் நச்சுகள், இரத்த சிவப்பணுக்களை சேதப்படுத்துவதன் மூலம் செவுள் மற்றும் திசுக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் என்று பிராட் மார்ட்டின் கூறினார்.

இந்த சூழ்நிலையால் கடல்வாழ் உயிரினங்கள் பெரிய அளவில் இறந்து வருவதாக அவர் கூறினார்.

மேலும் இந்த நிலையால் மீன்பிடி தொழிலும் சிக்கலுக்கு உட்பட்டுள்ளதாகவும் மீன்பிடி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...