Breaking Newsமெல்பேர்ண் ஷாப்பிங் செண்டரில் கத்தி சண்டை -பீதியடைந்த பொதுமக்கள்

மெல்பேர்ண் ஷாப்பிங் செண்டரில் கத்தி சண்டை -பீதியடைந்த பொதுமக்கள்

-

மெல்பேர்ணில் 10 பேர் கொண்ட கும்பல் கத்தி சண்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு ஷாப்பிங் சென்டர் பூட்டப்பட்டு, வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Preston-இல் உள்ள Northland Shopping Centre-இல் பிற்பகல் 2.30 மணியளவில் நடந்த கத்தி சண்டை சம்பவத்தைத் தொடர்ந்து 15 வயது சிறுவனும் மற்றொரு ஆணும் கைது செய்யப்பட்டதாக விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆம்புலன்ஸ் விக்டோரியாவின் கூற்றுப்படி, ஒரு டீனேஜர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆன்லைனில் பரவி வரும் காட்சிகளில், Northland-இற்குள் ஒரு பெரிய கத்தியுடன் ஒரு ஆண் மற்ற இருவருடன் மோதுவது போல் தெரிகிறது. இதைக் கண்டு அச்சமடைந்த சிலர் வெளியே ஓடத் தொடங்கியதாகவும், சிலர் சிறு குழந்தைகளை சுமந்துகொண்டும், தள்ளுவண்டியுடன் ஓடுவதையும் காண முடிந்தது.

உடனே சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததும், போலீசார் அங்கு வந்து மீதமுள்ளவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட இருவரைத் தவிர, மற்ற எட்டு இளைஞர்களையும் போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

Latest news

அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா திருடியதாக ட்ரம்ப் குற்றம்

ஒபாமா ஆட்சி நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா திருடியுள்ளதாக ரஷ்யா மீது ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்க, இராணுவ கல்விக்கூடத்தில் நடந்த பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இதுவரை கண்டிராத மோசமான வறட்சி

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள விவசாயிகள், தாங்கள் இதுவரை கண்டிராத மோசமான வறட்சியை எதிர்கொண்டு வருவதாகவும், இதனால் கூடுதல் உதவியைக் கோருவதாகவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் . அடிலெய்டில் இருந்து...

ஆஸ்திரேலியாவில் கட்டிடம் மற்றும் கட்டுமானத் துறையில் சரிவு

வீட்டுவசதி நெருக்கடியின் காரணமாக அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய, கட்டிடம் மற்றும் கட்டுமானத் துறை தற்போது அதிக வீடுகளைக் கட்ட வேண்டிய கடுமையான அழுத்தத்தில்...

சுறா கட்டுப்பாட்டிற்கு மிகப்பெரிய நிதி முதலீடு

வரலாற்றில் மிகப்பெரிய நிதி முதலீடான சுறா கட்டுப்பாட்டுக்காக குயின்ஸ்லாந்து அரசாங்கம் 88 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. இந்த சுறா கட்டுப்பாட்டு மேலாண்மைத் திட்ட முன்மொழிவின் முக்கிய நோக்கம்,...

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரத்தில் குப்பைத் தொட்டிகளில் ஏற்படவுள்ள மாற்றம்

மறுசுழற்சியை ஊக்குவிக்கும் முயற்சியாக, பெர்த் நகரம் சிவப்புக் கழிவுத் தொட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே அவர்களின் குப்பைகளை...

சிட்னியை உலுக்கிய சமீபத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

சிட்னியை உலுக்கிய சமீபத்திய துப்பாக்கிச் சூட்டை NSW காவல்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு அமைச்சர் Yasmin Catley கண்டித்துள்ளார். மேலும் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு வலியுறுத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை...