Newsசாலமன் தீவுகளில் அமெரிக்கக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு

சாலமன் தீவுகளில் அமெரிக்கக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு

-

அமெரிக்கக் கடலோரக் காவல்படைக் கப்பலுக்குத் தென் பசிபிக் நாடான சாலமன் (Solomon) தீவுகளில் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் கப்பல் தனது துறைமுகத்தில் நிற்பதற்கு சாலமன் தீவுகள் மறுத்துள்ளது. தென் பசிபிக் நாடுகளிடையே சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருவது குறித்த கவலை அதிகரிக்கும் வேளையில் அந்தச் சம்பவம் நடந்துள்ளது.

ஒலிவியர் ஹென்ரி (Oliver Henry) என்ற அந்த அமெரிக்கக் கப்பல் எண்ணெயையும் உணவுப் பொருள்களையும் நிரப்புவதற்கு அனுமதி கேட்டபோது சாலமன் தீவுகள் மறுத்துவிட்டது.

Stars and Stripes ராணுவ ஏடு அந்தத் தகவலை வெளியிட்டது. சாலமன் தீவுகள் அரசாங்கம் அந்தச் செய்தி குறித்து கருத்து சொல்லவில்லை. அண்மையில் சீனாவும் சாலமன் தீவுகள் அரசாங்கமும் பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டன. சாலமன் தீவுகள் நூற்றுக்கணக்கான தீவுகளைக் கொண்ட தென்பசிபிக் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள்

இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்கள், ரோமானிய காலத்தைச் சேர்ந்த, தங்கத்தை விட அதிக மதிப்புள்ள ஊதா நிறப் பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் . இங்கிலாந்திலுள்ள Carlisle என்னுமிடத்தில் நடந்துவந்த...

6 நாட்களாக அமேசான் பொதிக்குள் சிக்கியிருந்த பூனை

அமெரிக்காவின் உடா மாநிலத்தில் அமேசான் நிறுவனத்தின் மூலம் இணையத்தில் பொருட்களை வாங்கிய தம்பதியர், சில பொருட்களை திருப்பி அனுப்ப பொதி செய்த போது பெட்டிக்குள் தங்கள்...

வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையும் – ஆஸ்திரேலிய ஆய்வில் தகவல்

உடல் பருமனை கட்டுப்படுத்த வாழைப்பழம் மிகவும் பொருத்தமான பழம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் வாழைப்பழம், வெண்ணெய், கீரை, தக்காளி மற்றும் கேரட் போன்றவற்றை அதிகம்...

10 சதவீதத்தால் குறைந்துள்ள iPhone விற்பனை

உலகின் மிகவும் பிரபலமான போன் மாடலான ஐபோன் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது. இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையை பாதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இது...

அவுஸ்திரேலியாவில் பணியாற்றிய இரண்டு வெளிநாட்டு உளவாளிகளை நாடு கடத்த முடிவு

அவுஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்த இரண்டு வெளிநாட்டு உளவாளிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் இவர்கள் இரகசியமாக நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உளவாளிகள் இருவர்...

ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான 10 கார்கள்

ஏப்ரல் மாத வாகன விற்பனை அறிக்கையின்படி, ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான 10 கார்கள் பெயரிடப்பட்டுள்ளன. பெடரல் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் 97,202...