Sydneyசிட்னியில் எரியும் வீட்டிலிருந்து கனப்பொழுதில் உயிர் தப்பிய இரு நபர்கள்

சிட்னியில் எரியும் வீட்டிலிருந்து கனப்பொழுதில் உயிர் தப்பிய இரு நபர்கள்

-

சிட்னியின் வடமேற்கில் உள்ள தங்கள் எரியும் வீட்டிலிருந்து கூரை இடிந்து விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இரு நபர்கள் வீட்டிலிருந்து தப்பித்துள்ளனர்.

அந்த நொடிப்பொழுதில் எடுத்த முடிவு அவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

இரவு 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட பின்னர், தீயணைப்பு வீரர்கள் கேமரன் அவென்யூவிற்கு விரைந்தனர்.

வீடு தீப்பற்றிய சமயத்தில் இரண்டாவது மாடி படுக்கையறை ஜன்னலிலிருந்து குதித்துவிட்டு, Joe-உம் Fua-உம் வீட்டிலிருந்து ஓடியுள்ளனர். Fua மூச்சு விட முடியாமல் விழித்ததாகவும், தன் நண்பனை அழைத்ததாகவும் Joe கூறினார்.

அவர்களின் சக வீட்டுக்காரர் Sumit கீழே உள்ள மரக்கட்டைக்கு நெருப்பை மூட்டியுள்ளார். அவர் அதை சரியாக மூடிவிட்டதாகவும், அது சாதாரணமாக எரிந்து கொண்டிருந்ததாகவும் அவர்கள் கூறினார். எனினும் இதிலிருந்து தான் தீ பரவியிருக்ககூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கடந்த குளிர்காலத்தில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அவசர சேவைகள் அமைச்சர் Johad Dib தெரிவித்ததோடு மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தினார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...