Sydneyசிட்னியில் எரியும் வீட்டிலிருந்து கனப்பொழுதில் உயிர் தப்பிய இரு நபர்கள்

சிட்னியில் எரியும் வீட்டிலிருந்து கனப்பொழுதில் உயிர் தப்பிய இரு நபர்கள்

-

சிட்னியின் வடமேற்கில் உள்ள தங்கள் எரியும் வீட்டிலிருந்து கூரை இடிந்து விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இரு நபர்கள் வீட்டிலிருந்து தப்பித்துள்ளனர்.

அந்த நொடிப்பொழுதில் எடுத்த முடிவு அவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

இரவு 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட பின்னர், தீயணைப்பு வீரர்கள் கேமரன் அவென்யூவிற்கு விரைந்தனர்.

வீடு தீப்பற்றிய சமயத்தில் இரண்டாவது மாடி படுக்கையறை ஜன்னலிலிருந்து குதித்துவிட்டு, Joe-உம் Fua-உம் வீட்டிலிருந்து ஓடியுள்ளனர். Fua மூச்சு விட முடியாமல் விழித்ததாகவும், தன் நண்பனை அழைத்ததாகவும் Joe கூறினார்.

அவர்களின் சக வீட்டுக்காரர் Sumit கீழே உள்ள மரக்கட்டைக்கு நெருப்பை மூட்டியுள்ளார். அவர் அதை சரியாக மூடிவிட்டதாகவும், அது சாதாரணமாக எரிந்து கொண்டிருந்ததாகவும் அவர்கள் கூறினார். எனினும் இதிலிருந்து தான் தீ பரவியிருக்ககூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கடந்த குளிர்காலத்தில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அவசர சேவைகள் அமைச்சர் Johad Dib தெரிவித்ததோடு மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தினார்.

Latest news

ஆடம்பர ஹோட்டல் போல தோற்றமளிக்கும் குயின்ஸ்லாந்து சிறை அறை

குயின்ஸ்லாந்தின் புதிய மற்றும் மிகப்பெரிய அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையான Lockyer பள்ளத்தாக்கு சீர்திருத்த மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த சிறைச்சாலைக்கு $965.2 மில்லியன் செலவிடப்பட்டதாகவும், இதில் 1,500...

சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்த இணையும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

Utta பல்கலைக்கழகத்தில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க பழமைவாத வர்ணனையாளர் சார்லி கிர்க்கிற்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது சார்லி கிர்க்கின்...

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு” – த.வெ.க. தலைவர் விஜய்

‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி...

நேபாளத்தில் முதல் பெண் பிரதமர் ஒருவர் பதவி ஏற்பு

இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்....

சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்த இணையும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

Utta பல்கலைக்கழகத்தில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க பழமைவாத வர்ணனையாளர் சார்லி கிர்க்கிற்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது சார்லி கிர்க்கின்...

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு” – த.வெ.க. தலைவர் விஜய்

‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி...