தெற்கு ஆஸ்திரேலியாவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட மத்திய-வடக்கு பிராந்தியத்தில் உள்ள Fischer-iல் உள்ள ஒரு பண்ணையை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு கூடுதலாக 2 மில்லியன் டாலர் கூட்டாட்சி நிதியுதவியை அறிவித்தார்.
நான்காம் தலைமுறை விவசாயிகளான Troy மற்றும் Lette Fischer-இற்குச் சொந்தமான வறட்சியால் பாதிக்கப்பட்ட உள்ளூர் பண்ணையின் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஒரு வருடத்தில் சராசரியாக பெய்யும் மழை இந்த வருடம் சற்றி குறைவாகவே பெய்துள்ளதென உள்ளூர் விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்.
இந்த கூடுதல் மத்திய நிதியானது விவசாயிகளுக்கான ஆதரவு சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“இந்த கூடுதல் நிதியானது, நிதி ஆலோசனையைப் பயன்படுத்த அனுமதிக்கும், ஏழை விவசாய மக்களுக்கு அதிக ஆதரவை வழங்கும்” என்று அல்பானீஸ் கூறினார்.
2025 தேசிய வறட்சி மன்றம் Mildura-இல் இருந்து Gawler-இற்கு மாற்றப்படும் என்பதையும் அல்பானீஸ் உறுதிப்படுத்தினார். மேலும் தேசிய வறட்சி மன்றம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.