Newcastle-இல் நபர் ஒருவர் தனது மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து அவளுக்கு பிரிவினை அடையாளக் கோளாறு (Dissociative Identity Disorder – DID) ஏற்படக் காரணமாக இருந்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நபர் தனது இரண்டு மகள்களுக்கு எதிராக 23 துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
பிரிவினை அடையாளக் கோளாறு (DID) என்பது ஒரு மனநோயாகும். இதில் ஒரு நபர் பல தனித்துவமான ஆளுமைகளைக் கொண்டுள்ளார் (referred to as “alters”).
எனவே, துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மகள் பல்வேறு அடையாளங்களின் கீழ் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க அனுமதிக்கப்பட்டார்.
அதன்படி, அவர் 30 வயது பெண், 5 வயது குழந்தை மற்றும் 13 வயது மகள் என சாட்சியங்களை அளித்துள்ளார்.
இதற்கிடையில், ஆஸ்திரேலியாவில் வெவ்வேறு ஆளுமைகளாகக் கொடுக்கப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு ஒரு வழக்கு விசாரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.





