ஆஸ்திரேலியாவில் தபால் ஊழியர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பணியில் இருக்கும்போது நாய் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தபால் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக citronella மற்றும் தண்ணீர் அடங்கிய spray பாட்டிலை வழங்க ஆஸ்திரேலியா போஸ்ட் முடிவு செய்துள்ளது.
மேலும், ஒரு நாளைக்கு சுமார் 9 நாய் கடிகளும், வாரத்திற்கு 44 நாய் கடி விபத்துகளும் பதிவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
சோதனைகளில் spray பாட்டில் 80% வெற்றி விகிதத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது நாயின் கவனத்தை வெற்றிகரமாகத் திசைதிருப்பியுள்ளது.
இது நாய்க்கு எந்தத் தீங்கும் விளைவிக்காமல் ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கும் என்று ஆஸ்திரேலிய போஸ்ட் பாதுகாப்பு மேலாளர் ரஸ்ஸல் மன்ரோ கூறினார்.
ஜூலை மாத இறுதிக்குள், அனைத்து அஞ்சல் ஊழியர்களுக்கும் spray பாட்டில்கள் வழங்கப்படும் என்றும், பயன்படுத்த வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.