எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40 பெண்கள் கர்ப்பமாகிவிட்டதாகப் புகாரளித்ததைத் தொடர்ந்து, அவற்றைப் பயன்படுத்தும் பெண்கள் பயனுள்ள கருத்தடை முறைகளைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
Southampton பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்க மருத்துவ ஆலோசகரான Ying Cheong, இந்த மருந்துகளால் ஏற்படும் வயிற்றுக் கோளாறு, சில பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகளின் செயல்திறனைக் குறைக்கக்கூடும் என்று கூறினார்.
எனவே, அது எதிர்பாராத கர்ப்பத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.
பிரபலமான எடை இழப்பு ஊசி மருந்துகளான Ozempic, Wegovy மற்றும் Mounjaro-ஐ பயன்படுத்தும் பெண்கள் மருந்தை உட்கொள்வதைத் தவிர பிற கருத்தடை முறைகளையும் பயன்படுத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் நிறுவனத்தின் அறிக்கை கூறியது.
எடை இழப்பு ஊசிகளை எடுத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகிவிட்டால், உடனடியாக ஊசிகளை எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டு மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு அவர்கள் மக்களை எச்சரித்தனர்.
இந்த தடுப்பூசிகள் கர்ப்பத்திற்கு பாதுகாப்பானவை என்று உறுதிப்படுத்தப்படாததால், மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
