Breaking Newsமின்-ஸ்கூட்டர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று WA அறிவிப்பு

மின்-ஸ்கூட்டர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று WA அறிவிப்பு

-

அதிகரித்து வரும் சமூக அக்கறைக்கு பதிலளிக்கும் விதமாக, மின்-ஸ்கூட்டர்களின் பாதுகாப்பு குறித்து WA அரசாங்கம் மாநிலம் தழுவிய விசாரணையைத் தொடங்கியுள்ளது.

“E-rideables”-இன் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய அரசாங்கம் இரு கட்சி நாடாளுமன்றக் குழுவை அமைக்கும்.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மாநிலத்தில் e-rideables வாகனங்கள் சம்பந்தப்பட்ட நான்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் பெர்த் தந்தையான Thahn Phan என்பவர் உயிரிழந்ததும் அடங்கும். கடந்த வாரம் வாடகை மின்-ஸ்கூட்டரில் சென்ற பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி ஒருவர் அவரை மோதியதாகக் கூறப்படுகிறது.

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாநில அரசு இன்னும் அதிகமாக மின்-ஸ்கூட்டர்கள் பற்றி ஆராய வேண்டும் என்று கூறியது.

இ-ஸ்கூட்டர்களின் வேகம் குறித்து மிகவும் கடுமையான விதிமுறைகள் உள்ளதாக துணை பிரதமர் Rita Saffioti கூறினார்.

அபராதங்களை விரிவுபடுத்துதல், வாகனங்கள் எவ்வாறு வாடகைக்கு எடுக்கப்படுகின்றன. நெரிசல் மிகுந்த பகுதிகளில் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன மற்றும் வேகக் கட்டுப்பாடு போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைப் பாதுகாப்பாக மாற்றுவது எப்படி என்பது குறித்து இந்தக் குழு ஆராய உள்ளது.

புதிய குழுவை அறிவித்த காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு அமைச்சர் Reece Whitby, E-rideables வாகனங்களிலிருந்து அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க அரசாங்கம் “முடிந்தவரை” செய்ய விரும்புவதாகக் கூறினார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...