Breaking Newsமின்-ஸ்கூட்டர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று WA அறிவிப்பு

மின்-ஸ்கூட்டர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று WA அறிவிப்பு

-

அதிகரித்து வரும் சமூக அக்கறைக்கு பதிலளிக்கும் விதமாக, மின்-ஸ்கூட்டர்களின் பாதுகாப்பு குறித்து WA அரசாங்கம் மாநிலம் தழுவிய விசாரணையைத் தொடங்கியுள்ளது.

“E-rideables”-இன் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய அரசாங்கம் இரு கட்சி நாடாளுமன்றக் குழுவை அமைக்கும்.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மாநிலத்தில் e-rideables வாகனங்கள் சம்பந்தப்பட்ட நான்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் பெர்த் தந்தையான Thahn Phan என்பவர் உயிரிழந்ததும் அடங்கும். கடந்த வாரம் வாடகை மின்-ஸ்கூட்டரில் சென்ற பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி ஒருவர் அவரை மோதியதாகக் கூறப்படுகிறது.

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாநில அரசு இன்னும் அதிகமாக மின்-ஸ்கூட்டர்கள் பற்றி ஆராய வேண்டும் என்று கூறியது.

இ-ஸ்கூட்டர்களின் வேகம் குறித்து மிகவும் கடுமையான விதிமுறைகள் உள்ளதாக துணை பிரதமர் Rita Saffioti கூறினார்.

அபராதங்களை விரிவுபடுத்துதல், வாகனங்கள் எவ்வாறு வாடகைக்கு எடுக்கப்படுகின்றன. நெரிசல் மிகுந்த பகுதிகளில் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன மற்றும் வேகக் கட்டுப்பாடு போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைப் பாதுகாப்பாக மாற்றுவது எப்படி என்பது குறித்து இந்தக் குழு ஆராய உள்ளது.

புதிய குழுவை அறிவித்த காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு அமைச்சர் Reece Whitby, E-rideables வாகனங்களிலிருந்து அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க அரசாங்கம் “முடிந்தவரை” செய்ய விரும்புவதாகக் கூறினார்.

Latest news

இஸ்ரேலை ஆதரித்தால் USA, UK , பிரான்ஸ் மீதும் தாக்குதல் – ஈரான் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் செயற்பட்டால், அந்த நாடுகளின் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இராணுவ முகாம்கள் மற்றும் கப்பல்களை...

$1.5 மில்லியன் மதிப்புள்ள சிற்பத்தை ‘போலி’ என பல வருடங்களாக நினைத்த குடும்பம்

பிரெஞ்சு கலைஞர் Auguste Rodin-இன் ஒரு சிற்பம் - கிட்டத்தட்ட 120 ஆண்டுகளாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைந்து, ஒரு பிரதி என்று கருதப்பட்டது. இது ஏலத்தில் €860,000...

குடிபோதையில் பாடசாலை வாயிற்கதவில் மோதிய NSW காவல்துறை மாணவர்

குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் NSW காவல்துறை மாணவர் ஒருவர், படையின் அகாடமி தளத்தில் உள்ள வாயிற்கதவில் மோதியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். சனிக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் NSW போலீஸ் அகாடமியின் முன்...

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...

பிரிஸ்பேர்ணுக்கு வெளியே சில ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தலாம் – பிரதமர் அல்பானீஸ்

2032 ஆம் ஆண்டுக்கான பிரிஸ்பேர்ணின் சில ஒலிம்பிக் இடங்கள் குறித்து அந்தோணி அல்பானீஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார். வெள்ளிக்கிழமை Two Good Sports podcast-இல் பேசிய பிரதமர், சில விளையாட்டுகளை சிட்னிக்கு...

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...