Breaking Newsகனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதம் 

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதம் 

-

கனடாவின், பிரம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதமாக்கப்பட்டதை கனேடிய தமிழர் தேசிய அவை கண்டித்துள்ளது. 

அறிக்கையொன்றினூடாக இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தின் முக்கிய அம்சங்களை ஒளிரச் செய்யும் பெரும்பாலான விளக்குகள் நேற்று காலை அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மே மாதம் 27 ஆம் திகதி இரவு, தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கெமராக்களிலிருந்து பெறப்பட்ட படங்கள், காணொளிகளைக் கொண்டு விசாரணைகளை முன்னெடுக்குமாறு கனேடிய காவல்துறையினரை அந்த அமைப்பு கோரியுள்ளது.

சர்வதேச அங்கீகாரம், சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி தேடும் தமிழ் மக்களின் நீண்ட நெகிழ்ச்சியான பயணத்தில், இந்த தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

அந்த நினைவுச்சின்னத்தைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல், இனப்படுகொலைக்கு எதிராக எழுப்பப்படும் குரல்களை மௌனிக்கச் செய்யும் முயற்சிகளாகும் என்றும் கனேடிய தமிழர் தேசிய அவை சுட்டிக் காட்டியுள்ளது.

Latest news

தள்ளுபடிகளை ரத்து செய்து Menu-வில் மாற்றங்கள் செய்யும் Domino’s

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பீட்சா சங்கிலியான Domino's Pizza Enterprises, சுமார் 20 ஆண்டுகளில் முதல் முறையாக வருடாந்திர லாப இழப்பை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆசியா...

விக்டோரியாவில் தொடரும் காவல்துறை அதிகாரிகளைக் கொன்ற சந்தேக நபரைத் தேடும் பணி

விக்டோரியாவின் கிராமப்புறத்தில் நேற்று இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியைத் தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது. ஆல்பைன் பகுதியில் வாங்கரட்டாவின் தென்கிழக்கே...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...