மெல்பேர்ணில் ஆம்புலன்ஸ் 7 மணி நேரம் தாமதமானதால் ஒரு பெண் தனது வீட்டில் இறந்துவிட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
32 வயதான Christina Lackmann என்ற அந்தப் பெண், மாலை 7 மணியளவில் டிரிபிள் ஜீரோ (000) அவசர சேவைத் துறையைத் தொடர்பு கொண்டுள்ளார்.
பின்னர் சம்பந்தப்பட்ட பெண் ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் குறித்த ஆம்புலன்ஸ் 7 மணிநேரம் தாமதமாகி வந்ததால் அந்தப் பெண் இறந்துவிட்டார்.
அவருக்கு விரைவில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், அவர் உயிர் பிழைத்திருக்கலாம் என்று மரண விசாரணை அதிகாரி Catherine Fitzgerald விசாரணை முடிவுகளில் தீர்ப்பளித்துள்ளார்.
அதிகாலை 3 மணியளவில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்தபோது, அவரது உடல் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், அவர் அதிகப்படியான காஃபின் உட்கொண்டதாகவும், அதுவே அவரது மரணத்திற்குக் காரணம் என்றும் தெரியவந்தது.
சுமார் 80% ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைகளுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதால், அவசரநிலைகளுக்கு பதிலளிக்க முடியாமல் தவிப்பதாக கொரோனர் Catherine Fitzgerald கூறினார்.
இதனால் ஏற்படும் உயிர் இழப்பு ஒரு குற்றத்திற்குச் சமம் என்றும் அவர் மேலும் கூறினார்.