அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட உள் ஆவணம், “பறக்க தடை பட்டியலில்” (No Fly List) 36 நாடுகளைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது.
விமானப் பயணம் தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்கு குடியேற்ற மற்றும் குடியேற்றம் அல்லாத விசாக்களைப் பெறுவதில் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளனர்.
இந்தப் பட்டியலில் எகிப்து, நைஜீரியா, சிரியா, கானா, தெற்கு சூடான் மற்றும் சிரியா உள்ளிட்ட பல நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நாடுகள் வழியாக அமெரிக்காவிற்குள் வரும் மக்கள் அமெரிக்க சிவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் கூறுகிறார்.
அவர்கள் விசா காலத்தை மீறி தங்கியிருப்பதாலோ அல்லது நாடு கடத்தப்பட்ட நபர்களை திருப்பி அனுப்புவதற்கு ஆதரவளிப்பதாலோ இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எகிப்து, ஏமன் மற்றும் சூடான் போன்ற நாடுகளின் குடிமக்கள் தீவிரவாத மத நம்பிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்பதால், இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று டிரம்ப் கூறினார்.