சமூக ஊடகங்கள் மூலம் குற்றங்களைத் தூண்டும் நபர்களுக்கு எதிர்காலத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
விக்டோரியா மாநிலம் இன்று நாடாளுமன்றத்தில் தொடர்புடைய முன்மொழிவை சமர்ப்பிக்கும்.
சமூக ஊடகங்கள் மற்றும் செய்தியிடல் செயலிகள் மூலம் கடுமையான குற்றங்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகள் சமீப காலமாக அதிகரித்து வருவதாக Attorney-General Sonya Kilkenny தெரிவித்தார்.
அதன்படி, எதிர்காலத்தில் திருட்டு மற்றும் கார் திருட்டு, வீடுகளில் புகுந்து தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்களை ஊக்குவிப்பது முற்றிலும் தடைசெய்யப்படும்.
இதுபோன்ற சம்பவங்களைத் தூண்டும் எவருக்கும் எதிராகப் பொருந்தும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.
குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு குற்றத்திற்கான தண்டனையுடன் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பதும் அனைவரும் கவனிக்கத்தக்க விடயமாகும்.