உள்துறை அமைச்சகம் புதிய குடிவரவு மசோதா 2025 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஜூலை 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும்.
2025 Migration Amendment Instrument என்று அழைக்கப்படும் இது, அடுத்த மாதம் முதல் ஆன்லைனில் கிடைக்கும்.
இதில் புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு, அகதிகள் மற்றும் மனிதாபிமான விசாக்கள் பற்றிய தகவல்கள் அடங்கும்.
ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக, Special Humanitarian Program (SHP) இன் கீழ் துணைப்பிரிவு 202 (Global Special Humanitarian) விசாவிற்கான விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், புதிய திருத்தத்தின் கீழ் 842 (Application for an SHP visa) மற்றும் 681 (Refugee and Special Humanitarian Proposal) விசா விண்ணப்பதாரர்கள் துறையின் ImmiAccount மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இருப்பினும், அந்த விண்ணப்பங்கள் மின்னணு முறையில் பூர்த்தி செய்யப்படும்போது மட்டுமே புதிய அமைப்புகள் பொருந்தும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய நடவடிக்கை, துறையின் பரந்த டிஜிட்டல் மாற்றத்தின் ஒரு பகுதியாகும் என்றும், விண்ணப்ப செயல்முறையை நெறிப்படுத்தி மேலும் திறமையானதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது.