சிட்னியின் inner west-இல் நடந்த ஒரு பெரிய விபத்துக்குப் பிறகு ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Erskinevilleஇல் ஒரு காரை நிறுத்த முயன்றபோது ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தத் தவறிவிட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலின் போது, வாகனம் சாலையின் அருகே இருந்த ஒரு கம்பத்தில் மோதியது.
விபத்துக்குப் பிறகு ஆறு இளைஞர்களும் தப்பி ஓடிவிட்டதாகவும், ஆனால் சுற்றியுள்ள பகுதியில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
காரை சோதனை செய்தபோது, balaclavas, கையுறைகள் மற்றும் பல மொபைல் போன்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
14 வயது ஓட்டுநர் வயிற்று வலிக்காக சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்று சிட்னி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மற்ற இளைஞர்களுக்கு காயம் ஏற்படவில்லை என்றாலும், பாதுகாப்புக்காக அவர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.