Newsபோதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

-

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன.

பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக புதிய அறிக்கை காட்டுகிறது.

கடந்த ஆண்டு, 2,272 இறப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் முக்கால்வாசிக்கும் அதிகமானவை போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் ஏற்பட்டவை ஆகும்.

இந்த இறப்புகளின் எண்ணிக்கை மாதத்திற்கு சுமார் 189 ஆகும். மேலும் போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் பெரும்பாலும் மாரடைப்பு மற்றும் முக்கிய தமனிகளில் அடைப்பு காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

பெரும்பாலான இறப்புகளில் ஈடுபடும் மிகவும் பொதுவான போதைப்பொருள் ஹெராயின் என்றும், இது மொத்த இறப்புகளில் 43.9% என்றும் Penington நிறுவனத்தின் தலைமை நிர்வாகி John Ryan கூறினார்.

இந்த இறப்புகளில் பெரும்பாலானவை தனியார் வீடுகளில் நிகழ்ந்துள்ளன, பெரும்பாலானவை பிராந்திய மற்றும் கிராமப்புற நகரங்களில் உள்ள வீடுகளில் நிகழ்கின்றன.

போதைப்பொருள் தொடர்பான மரணங்கள் தடுக்கக்கூடியவை என்றும், அரசு நிறுவனங்கள் இதில் சரியான கவனம் செலுத்த வேண்டும் என்றும் Penington நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மாறிவரும் Rewards மற்றும் Loyalty திட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபலமான Rewards மற்றும் Loyalty திட்டங்கள் மாறி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் காரணமாக, Qantas மற்றும் Virgin போன்ற பிரபலமான விமான நிறுவனங்கள்...

விற்பனைக்கு வர உள்ள நீண்டகாலமாக இயங்கும் ஆஸ்திரேலிய பேக்கரி சங்கிலி

ஆஸ்திரேலிய உணவுத் துறையில் ஒரு முக்கிய நிறுவனம், கடந்த நிதியாண்டில் அதன் தாய் நிறுவனத்திற்கு 12 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய பின்னர் விற்பனைக்கு...

உலக சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுவன் அற்புதமான நீர் விளையாட்டின் மூலம் உலக சாதனை படைத்துள்ளான். ஒரே பேட்டரி சார்ஜில் மின்சார Hydrofoiling-இல் அதிக தூரம் பயணித்ததற்கான புதிய உலக...

பாசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் பேரழிவு தரும் பாசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதற்காக ஒரு புதிய சோதனை ஆய்வகத்தில் மில்லியன் கணக்கான டாலர்கள்...

பாசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் பேரழிவு தரும் பாசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதற்காக ஒரு புதிய சோதனை ஆய்வகத்தில் மில்லியன் கணக்கான டாலர்கள்...

Triple-Negative மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை

Beta blockers சிகிச்சையானது Triple-Negative மார்பகப் புற்றுநோயின் பரவலைத் தடுக்க முடியும் என்று ஒரு புதிய ஆஸ்திரேலிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய் பரவலுக்கான...