Newsஅமெரிக்க விசா குறித்து வெளியான விசேட அறிவிப்பு

அமெரிக்க விசா குறித்து வெளியான விசேட அறிவிப்பு

-

அமெரிக்க விசா பெறுவதற்கு மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது.

H-1B விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிக்கிறது. அதேபோல, படிக்க வரும் மாணவர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் தனித்தனி விசாக்கள் உண்டு.

இதனிடையே, கடந்த ஜூலை 4ம் திகதி, வரிக்குறைப்பு மசோதா சட்டமாக்கப்பட்டதையடுத்து, தொழில்முனைவோர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான விசா பெறுவதற்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். பணவீக்கத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்தக் கட்டணம் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் அமுலுக்கு வரும் இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து குடியுரிமை இல்லாத விசா விண்ணப்பங்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளோமேடிக் விசாக்கள் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் இந்த புதிய நடைமுறையினால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவர்களுக்கு நிதிச்சுமை அதிகரிக்கிறது. எனவே, அமெரிக்காவுக்கு சுற்றுலா மற்றும் கல்வி பயில்வோர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

டிரம்பை நிராகரித்து அல்பானீஸ் இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் 

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்தப் பயணத்தின் போது சீன அதிபர் Xi Jinping மற்றும் பிரதமர்...

ஆஸ்திரேலியாவை ஆக்கிரமிப்பு பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும் போராட்டத்தில் வெளியான புதிய விரிவான படங்கள்

ஆஸ்திரேலிய விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக, புகைப்படங்களின் தொகுப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இது “Pest Australia’s Disease Image Library (PaDIL)” என்று அழைக்கப்படும் தேசிய...

ஆபத்தில் உள்ள வயது வந்தோருக்கான மாற்றுத்திறனாளி பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனம்

முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமான Annecto, தன்னார்வ நிர்வாகத்தில் நுழைந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த...

ஆஸ்திரேலியாவின் வரிகள் இரட்டிப்பாக்கப்படும் – டிரம்ப் மிரட்டல்

ஆஸ்திரேலியா மீது விதிக்கப்படும் வரிகளை இரட்டிப்பாக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளுக்கும் 200 சதவீத வரியை அறிவிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும்,...

தற்கொலைகளுக்கு பெரிதும் காரணமாக உள்ள ChatGPT

Stanford பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், ChatGPT போன்ற AI chatbots கடுமையான மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் தெரியவந்துள்ளது. இது மனநோய், பித்து மற்றும் தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்...

2025 ஆம் ஆண்டுக்குள் அதிகமான ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வார்கள்

இந்த ஆண்டு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நுகர்வோர் செலவு $280 மில்லியனை எட்டும் என்று ANZ எதிர்பார்க்கிறது. 2024 உடன் ஒப்பிடும்போது இது...