Newsபாகிஸ்தானில் அரங்கேறிய இராமாயணம்!

பாகிஸ்தானில் அரங்கேறிய இராமாயணம்!

-

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில், இராமாயண நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதற்கு அங்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

மௌஜ் என்ற நாடக குழுவினர் செயற்கை நுண்ணறிவின் உதவியுன் இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்தனர். நாடகத்தை யோகேஸ்வர் கரேரா என்பவர் இயக்கியுள்ளார். இந்த நாடகத்துக்கு மக்கள் இடையே வரவேற்பும், விமர்சகர்களின் பாராட்டுகளும் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக யோகேஸ்வர் கூறுகையில், இராமாயணத்தை மேடையில் அரங்கேற்றியது சிறப்பானது. இதற்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதனால் எந்த பின்னடைவும், பாதுகாப்பு சவால்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இதேவேளை உமைர் அலவி என்ற விமர்சகர் கூறுகையில், ‘ கதை சொல்வதில் உள்ள நேர்த்தியிலும், நேரடி இசை , வண்ணமயமான உடைகள் மற்றும் மனதை தொடும் வடிவமைப்புகள் அனைத்தும் நிகழ்ச்சியின் பிரமாண்டத்துக்கு கூடுதல் அழகை கொடுத்தது. உலகெங்கும் உள்ள இலட்சக்கணக்கான மக்களை எதிரொலிக்கும் ஒரு நிகழ்வு என்பதால், சிறப்பாக அமைந்தது எனத் தெரிவித்தார்.

இராமாயண நாடகத்தை தயாரித்த ராணா காஸ்மி, சீதையாக நடித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் புகை மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம்

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் இன்று காலை அவசர தீ எச்சரிக்கை ஒலித்ததால் விமானப் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று காலை 8...

கொசுக்களால் பரவும் மூளை வைரஸ் பற்றி எச்சரிக்கை

தெற்கு NSW இல் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) குழுவைச் சேர்ந்த ஒரு அரிய, தீவிர மூளை வைரஸ் பரவும் அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் இந்த...