Newsமீண்டும் அரசியலில் களமிறங்குவாரா கோட்டாபய? நாமல் வெளியிட்ட தகவல்

மீண்டும் அரசியலில் களமிறங்குவாரா கோட்டாபய? நாமல் வெளியிட்ட தகவல்

-

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பியது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார் .

“எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான் தீர்மானிக்க வேண்டும்.

அரசியலில் ஈடுபடலாமா வேண்டாமா என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும். மற்றவர்களுக்காக முடிவெடுக்கும் உரிமை எங்களுக்கு இல்லை,” எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி தனது முடிவை அறிவித்தவுடன் கட்சியின் நிர்வாக சபைக்கு அறிவிப்போம். அவருக்கு இலங்கையில் வசிக்கவும், அரசியலில் ஈடுபடவும் அனைத்து உரிமைகளும் இருக்கின்றது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

இலங்கையர் ஒருவரை தாக்கிய பிரித்தானிய பொலிஸ் அதிகாரிக்கு விதிக்கப்பட்ட தண்டனை

இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவரை குற்றவாளி என தவறாக நினைத்து தாக்கிய குற்றத்திற்காக இங்கிலாந்து பெருநகர காவல்துறை அதிகாரி ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் கொலை...

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர $925 மில்லியன்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான அவசர அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, வன்கொடுமைத் திட்டத்தை நிறுவுவதற்கு $925 மில்லியன் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வன்முறைக்கு உள்ளாகும்...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேச சிறப்பு அமைச்சரவை கூட்டம்

அவுஸ்திரேலியாவில் பெரிதும் பேசப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து விவாதிக்க இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. வன்முறையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார் அரசர் சார்லஸ்

கடந்த பெப்ரவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அரசர் சார்லஸ் நேற்று (30) மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார். அது, ராணி கமிலாவுடன் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்குச்...