Newsஅமெரிக்க பத்திரிகை மீது நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்த ட்ரம்ப்

அமெரிக்க பத்திரிகை மீது நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்த ட்ரம்ப்

-

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், Wall Street Journal பத்திரிகை, அதன் உரிமையாளர் Rupert Murdoch உள்ளிட்ட பலரை எதிர்த்து 10 பில்லியன் அமெரிக்க டொலருக்கான அவதூறு வழக்கொன்றை மியாமி கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Jeffrey Epstein மற்றும் ட்ரம்ப் இடையேயான நெருக்கமான தொடர்பு குறித்து, Wall Street Journal பத்திரிகை கடந்த 18ம் திகதி கட்டுரை ஒன்றை வெளியிட்டதாகவும் அதில் எப்ஸ்டீனின் 50வது பிறந்த நாளுக்கு ட்ரம்ப் கடிதம் ஒன்றை அனுப்பியதாகவும், அதில் நிர்வாண பெண்மணியின் படம் ஒன்றை வரைந்து, ‘இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஒவ்வொரு நாளும் மற்றொரு இரகசியத்தை உணரட்டும்’ என்று எழுதியதாகவும் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளதாகவும் இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘அது என்னுடைய வார்த்தைகள் இல்லை. நான் பேசும் விதமும் இல்லை. நான் படங்களையும் வரையமாட்டேன். இது தவறான, அவதுாறு பரப்பும் செய்தி’ என கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக பத்திரிகையின் உரிமையாளர் உள்ளிட்ட பலரை எதிர்த்து10 பில்லியன்அமெரிக்க டொலருக்கான இழப்பீடு கோரி, மியாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம், அனைத்தையும் உறுதியான ஆதாரங்களுடன் தான் எழுதியுள்ளோம்’ என Wall Street Journal பத்திரிகை கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...