NewsJeju விமான விபத்துக்கு விமானியின் தவறே காரணம்

Jeju விமான விபத்துக்கு விமானியின் தவறே காரணம்

-

179 பேரை பலிகொண்ட தென் கொரிய விமான விபத்துக்கு விமானியின் தவறுதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

கடந்த டிசம்பரில் நிகழ்ந்த Jeju விமான விபத்து தொடர்பான விசாரணையின் முதற்கட்ட முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

பறவைகள் மோதியதால் விமானத்தின் இரண்டு என்ஜின்களும் சேதமடைந்த போதிலும், விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு விமானிகள் குறைந்த சேதம் அடைந்த எஞ்சினை செயலிழக்கச் செய்ததாக தெரியவந்துள்ளது.

தென் கொரிய விமானப் போக்குவரத்து மற்றும் ரயில்வே விபத்து விசாரணை வாரியம், விமானத்தின் இயந்திரங்கள் குறித்த தனது விசாரணையின் முடிவுகளை கடந்த வார இறுதியில் வெளியிட திட்டமிட்டிருந்தது.

இருப்பினும், அரசு அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கடும் எதிர்ப்புகள் காரணமாக பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட வேண்டியிருந்தது.

டிசம்பர் 29 ஆம் திகதி முவான் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, போயிங் 737-800 விமானம் தரையிறங்கும் கியரை இழந்து ஓடுபாதையில் இருந்து சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானத்தில் இருந்த 179 பேர் இறந்தனர், இரண்டு பேர் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...