விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர் தீ விபத்துகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விக்டோரியா மாநிலத்துடன் இணைந்து, ஆபத்தான உபகரணங்களை இறக்குமதி செய்வதைத் தடுக்க புதிய சட்டங்களைக் கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருவதாக நியூ சவுத் வேல்ஸ் போக்குவரத்து அமைச்சர் ஜான் கிரஹாம் கூறுகிறார்.
மெல்போர்ன் மற்றும் சிட்னி ரயில் நிலையங்களில் பல இடங்களில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற பொருட்கள் மற்றும் பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்யாத பேட்டரிகள் காரணமாக லித்தியம்-அயன் பேட்டரிகளால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Metro, V/Line ரயில்கள் மற்றும் V/Line பேருந்துகளில் இந்தப் புதிய தடையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக விக்டோரியன் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், திட்டங்கள் குறித்த பொது ஆலோசனை ஆகஸ்ட் 18 வரை திறந்திருக்கும்.