Newsஇந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 25 % வரியை அறிவித்த ட்ரம்ப்

இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 25 % வரியை அறிவித்த ட்ரம்ப்

-

2025 ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிகளுக்கு 25% வரி அறவிடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

யுக்ரைன் மோதலுக்கு மத்தியில் இந்தியா, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் இராணுவ கொள்முதல்களில் ஈடுபடுவதை மையப்படுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

நட்பு நாடுகளாக இருந்தாலும், இந்தியாவின் அதிக வரிகள் உட்பட்ட விடயங்களால், இந்தியாவும் அமெரிக்காவும் மட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக தொடர்புகளைக் கொண்டுள்ளன என்று டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா தங்களின் நட்பு நாடாக இருந்தாலும், பல ஆண்டுகளாக இந்தியாவுடன், அமெரிக்கா ஒப்பீட்டளவில் சிறிய வியாபாரத்தையே மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன.

அத்துடன், அவை எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான நாணயமற்ற வர்த்தக தடைகளைக் கொண்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா வரலாற்று ரீதியாக ரஷ்யாவிலிருந்து பெரும்பாலான இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி கொள்வனவு செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், ரஷ்யா யுக்ரைனில் கொலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்பும் நேரத்தில் ஆகஸ்ட் முதல் இந்தியா 25% வரியை செலுத்தும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Latest news

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரணம் வழங்கும் ANZ

விக்டோரியன் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரண உதவிகளை வழங்க ANZ தயாராகி வருகிறது. அதன்படி, வீட்டுக் கடன்கள், கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள் மற்றும் சில...

அமெரிக்காவை விட ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை விரும்பாத தம்பதிகளின் விகிதம் அதிகம்

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2026 ஆம் ஆண்டில் 28 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு குடியேற்றத்தில் குறைவு மற்றும் குறைந்த பிறப்பு விகிதம் இருக்கலாம் என்று...

உடனடியாக திரும்பப் பெறப்படும் Kmart Ice Packs

ஆஸ்திரேலியா முழுவதும் Kmart கடைகளிலும் ஆன்லைனிலும் விற்கப்பட்ட இரண்டு Anko சிறிய மற்றும் பெரிய ஜெல் ஐஸ் பேக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன, ஏனெனில் அவற்றில் நச்சுப்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு $20 மில்லியன் மதிப்புள்ள கோகைனை ரகசியமாக இறக்குமதி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அடிலெய்டைச் சேர்ந்த ஒரு பெண் நீதிமன்றத்தில் ஆஜரானார். துப்பறியும் நபர்கள்,...

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...