CinemaInstagram-இல் புதிய சாதனை படைத்துள்ள தீபிகா படுகோன்

Instagram-இல் புதிய சாதனை படைத்துள்ள தீபிகா படுகோன்

-

இந்திய நடிகை தீபிகா படுகோன் Instagram-இல் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

தீபிகா படுகோனின் காணொளி Instagram-இல் 1.9 பில்லியன் பார்வைகளுடன் அதிகம் பார்க்கப்பட்டதாக மாறியுள்ளது. இது தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட காணொளியாக மாறியுள்ளதோடு அதிகமான பார்வைகளையும் பதிவு செய்துள்ளது.

ஹோட்டல் ஹில்டனுடன் கட்டண கூட்டாண்மையின் (paid partnership) ஒரு பகுதியாக ஜூன் 9 அன்று வெளியிடப்பட்ட இந்த காணொளி, Instagram-இல் முந்தைய அனைத்து பார்வையாளர்களின் சாதனைகளையும் முறியடித்துள்ளது.

இந்த காணொளி “It Matters Where You Stay” என்ற தலைப்பில் ஹில்டனின் உலகளாவிய பிரசாரத்தின் ஒரு பகுதியாகும். இதில் படுகோன் பிராண்ட் தூதுவராக பணியாற்றுகிறார்.

இந்த காணொளி இரண்டு மாதங்களுக்குள் இந்த மைல்கல்லை எட்டியது. ஹர்திக் பாண்ட்யா மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட பிற உயர்மட்ட நபர்களின் உள்ளடக்கத்தையும் இக் காணொளி முந்தியுள்ளது.

இதற்கு முன்பு, அதிகம் பார்க்கப்பட்ட காணொளிகளில் பாண்டியாவின் BGMI கூட்டாண்மை வீடியோ 1.6 பில்லியன் பார்வைகளுடன் மற்றும் ஸ்மார்ட்போனுக்கான விளம்பர காணொளி 1.4 பில்லியனுடன் அடங்கும்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...