வீட்டு மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான ஆலோசனை மற்றும் உதவிக்காக ஹாட்லைனுக்கு பெறப்பட்ட அழைப்புகளில் கிட்டத்தட்ட 60% பதிலளிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
ஆலோசனை சேவை வழங்குநரான DVConnect, ஜூலை 2023 முதல் மார்ச் 2025 வரையிலான காலகட்டத்தில் கைவிடப்பட்ட அழைப்புகளின் எண்ணிக்கையில் 388 சதவீதம் அதிகரிப்பை அறிவித்தது.
மேலும், கடந்த ஆண்டு ஒக்டோபரில், அதன் மகளிர் ஆலோசனை சேவைக்கு 6,500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன. அவற்றில் 4,000 அழைப்புகளுக்கு பதிலளிக்கப்படவில்லை.
உதவிக்கு அழைத்தவர்கள் கிட்டத்தட்ட 13 நிமிடங்கள் தொலைபேசி இணைப்பை இழந்தனர். பின்னர் இறுதியாக தொலைபேசி துண்டிக்கப்பட்டது.
மேலும், DVConnect ஊழியர்கள் தங்களுக்குத் தேவையான வேலை நேரத்தை 53% குறைத்துள்ளதாகவும், பல சந்தர்ப்பங்களில் திட்டமிடப்பட்ட நேரத்தை விடக் குறைவாகவே வேலை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நபருக்கும் உதவும் வகையில், இந்தச் சேவை 24 மணி நேரமும் மிக உயர்ந்த தரத்தில் வழங்கப்பட வேண்டும் என்று வீட்டு மற்றும் குடும்ப வன்முறைத் தடுப்பு அமைச்சர் Amanda Camm கூறுகிறார்.
இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இருந்தாலும், அவை ஒழுங்குபடுத்தப்படும் விதம் தோல்வியுற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.





