NoticesTamil Community Eventsஅக்சயன் மணிவண்ணன் எழுதிய "Tamil Saiva Poetry" நூல் வெளியீட்டு விழா

அக்சயன் மணிவண்ணன் எழுதிய “Tamil Saiva Poetry” நூல் வெளியீட்டு விழா

-

அக்சயன் மணிவண்ணன் எழுதிய “Tamil Saiva Poetry” நூல் வெளியீட்டு விழா மெல்பேர்ணில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏறக்குறைய 300 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஒரு வழக்கமான புத்தக வெளியீடு போலன்றி ஒரு தெய்வீகமான மனநிலையில் எல்லோரும் அமர்ந்திருந்தார்கள். பார்வையாளர்கள் கைத்தொலைபேசியை இரண்டு மணித்துளிகள் சுத்தமாக மறந்து மேடையையே வைத்த விழி மாறாது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“நூலுக்கு அணிந்துரை வழங்கியதுடன் தலைமை உரையாற்றவும் கிட்டிய வாய்ப்பு மிக அருமையான அனுபவம்” என்று பேராசிரியர் கலாநிதி சந்திரிக்கா சுப்ரமணியம் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

அடுத்து அக்சயன் மணிவண்ணன் ஏற்புரை வழங்கியபோது பலர் மெய்மறந்து உள்ளம் உருகி கண்ணீர் மல்க அமர்ந்து திருவாசகத் தேனைப் பருகினார்கள்.

இறுதியாக “முத்தைத்தரு பத்தித் திருநகை” உள்ளிட்ட ஐந்து திருப்புகழ் இசையை அக்சயன் வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தபோது இன்னும் சிறிது பாட மாட்டாரா என்று பலர் கேட்டார்கள்.

ஆஸ்திரேலிய நாட்டில் பிறந்து வளர்ந்த அட்சயன், நாயன்மார்களையும் அருணகிரிநாதனையும் படித்து உள்வாங்கி அதை மிகச் சிறப்பான ஒரு ஆங்கில நூலாக உருவாக்கி வெளியிட்டது பாராட்டுக்குரியது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...