இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவால் ஆஸ்திரேலியாவின் நாணயத்தாள்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், 0 டொலர் நாணயத்தாள்களில் இருந்த ராணியின் படம் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய மன்னராகப் பதவியேற்ற மூன்றாம் சார்லஸ் மன்னரின் படம் வைக்கப்படும்.
இன்று முதல் அச்சிடப்படும் நாணயத்தாள்களில் இது அமலுக்கு வரும்.
ஆஸ்திரேலியாவைத் தவிர, பிரித்தானியா – கனடா – நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் வெளியிடப்படும் நாணயங்கள் மற்றும் நாணயத்தாள்களில் இனிமேல் மன்னர் சார்லஸ் உருவமும் இடம்பெறும்.
மாண்புமிகு ராணி எலிசபெத் 02 இன் மரணம் காரணமாக, ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் கூட்டங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.
குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்த வேண்டாம் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பல இடங்கள் மற்றும் கட்டிடங்கள் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் காட்டுகின்றன.