Breaking Newsபிரிட்டனின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட இளவரசர் சார்லஸ்!

பிரிட்டனின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட இளவரசர் சார்லஸ்!

-

பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானதைத் தொடர்ந்து, புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் (73) அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டார்.

பிரிட்டன் வரலாற்றிலேயே, மிக அதிக வயதில் மன்னரானவர் மூன்றாம் சார்லஸ்தான். பிரிட்டன் அரச தம்பதி மறைந்த பிலிப் – ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் சார்லஸ் புதிய மன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதை அடுத்து பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற எளிய விழாவில், மன்னராக பிரகடனப்படுத்தப்படுவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார் மூன்றாம் சார்லஸ்.

எலிசபெத்தின் மறைவை அடுத்து, பட்டத்து இளவரசரான சாா்லஸ் (73) பிரிட்டனின் அடுத்த மன்னரானார். பிரிட்டன் அரச வம்ச சட்டத்தின்படி மூத்த மகனும், இளவரசருமான சாா்லஸ் உடனடியாக அடுத்த மன்னரானார். எனினும் இன்று அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவா் 3 ஆவது சாா்லஸ் என அழைக்கப்படுவாா் என்றும் கூறப்பட்டுள்ளது.

மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத் தனது தந்தை ஆறாம் ஜாா்ஜ் மறைவைத் தொடா்ந்து, 1952 இல் அரியணையேறிய இரண்டாம் எலிசபெத், சாதனை அளவாக 70 ஆண்டுகள் அரசியாக இருந்தாா். அவரது ஆட்சிக் காலத்தில் 15 பிரிட்டன் பிரதமா்களை அவா் நிா்வகித்துள்ளாா்.

95 வயதிலும் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த பெப்ரவரி மாதம் அவா் மீண்டு வந்தாா்.

இந்நிலையில், கோடைக் கால ஓய்வுக்காக பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து சென்று, ஸ்காட்லாந்திலுள்ள பால்மரால் அரண்மனையில் அவா் தங்கியிருந்தாா். ராணியின் மகளான இளவரசி ஆன், அவருடன் இருந்தாா்.

பிரிட்டனின் புதிய பிரதமராக செவ்வாய்க்கிழமை பதவியேற்ற லிஸ் டிரஸ்ஸை நேரில் அழைத்து அரசி எலிசபெத் சந்தித்ததுதான் கடைசி நிகழ்வாக அமைந்தது. அதன் பின்னா் எலிசபெத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் லிஸ் டிரஸ்ஸின் முழு அமைச்சரவை பதவியேற்பு விழாவும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், எலிசபெத் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை வியாழக்கிழமை அறிவித்தது.

ஸ்காட்லாந்தின் பால்மரால் அரண்மனையில் தங்கியிருந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல்நலம் குறித்து மருத்துவா்கள் கவலை தெரிவித்துள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவரது உடல்நிலை குறித்து அறிந்து, ராணியின் மகனும் பட்டத்து இளவரசருமான சாா்லஸ், அவரது மனைவி கமீலா, பேரன் வில்லியம் ஆகியோா் பால்மரால் விரைந்தனா்.

இந்நிலையில், எலிசபெத் காலமாகிவிட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூா்வமாக அறிவித்தது. இதைத்தொடா்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனையில் ஏராளமானோா் கூடினா்.

எலிசபெத்தின் உடல் லண்டனுக்கு கொண்டு வந்து அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. எலிசபெத்தின் கணவா் பிலிப் கடந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி தனது 99 ஆவது வயதில் காலமானாா்.

Latest news

2025-26 நிதியாண்டில் அழைத்து வரப்படும் நிரந்தர குடியேறிகள்

2025-26 நிதியாண்டில் 185,000 நிரந்தர குடியிருப்பாளர்கள் கொண்டு வரப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் Tony Burke உறுதிப்படுத்தியுள்ளார். குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தப்...

பிரபலமான குழந்தைகள் சாதனம் ஒன்றை பயன்பாட்டிலிருந்து அகற்ற அறிவிப்பு

ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC), பிரபலமான குழந்தை பூஸ்டர் இருக்கை தயாரிப்பிற்கு அவசரகால திரும்பப் பெறுதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மே 1...

காஸாவில் அதிகரிக்கும் பட்டினிச்சாவு

காஸாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 130 குழந்தைகள் உட்பட இதுவரை 361 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போருக்கு இடையிலும் காஸா மக்களுக்குத்...

உலகின் மிக நீண்ட விமானப் பயணங்களில் இடம்பிடித்த ஆஸ்திரேலியா

உலகின் மிக நீண்ட விமானப் பயணங்களில் ஆஸ்திரேலியா 5வது மற்றும் 4வது இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பெர்த்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் குவாண்டாஸ் விமானமும், அமெரிக்காவின்...

World Surf League பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய Surfer Molly Picklum தனது முதல் உலக Surf League சாம்பியன்ஷிப்பை வென்றார். பிஜியின் Cloudbreak கடற்கரையில் நடைபெற்ற உலக Surf League இறுதிப் போட்டியில்...

உலகின் மிக நீண்ட விமானப் பயணங்களில் இடம்பிடித்த ஆஸ்திரேலியா

உலகின் மிக நீண்ட விமானப் பயணங்களில் ஆஸ்திரேலியா 5வது மற்றும் 4வது இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பெர்த்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் குவாண்டாஸ் விமானமும், அமெரிக்காவின்...