Newsஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை கிரிக்கெட் அணி

ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை கிரிக்கெட் அணி

-

ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பையின் இறுதி போட்டி துபாயில் நடைபெற்றது. இதில், நாணய சுழற்சியல் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிஷங்கா, மெண்டீஸ் ஆகியோர் களமிறங்கினர். ஓட்டம் எதுவும் எடுக்காமலேயே மெண்டீஸும் 8 ஓட்டங்களில் நிஷங்காவும் ஆட்டமிழந்தனர்.

தனஞ்செயா டி சில்வா 28 ஓட்டங்களில் ஆட்டம் இழந்த நிலையில், குணாதிலக, ஷனகா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால், 58 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இலங்கை அணி பின் தங்கிய நிலையில் இருந்தது. எனினும் அடுத்ததாக களம் இறங்கிய பனுகா ராஜபக்சே அதிரடியாக விளையாடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அணியின் ஸ்கோர் 116 ரன்னாக இருந்த போது ஹசரங்கா 36 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 170 ரன்கள் எடுத்தது.

171 ஓட்டங்கள் எடுத்தால் கோப்பை என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. மதுஷன் பந்துவீச்சில் பாபர் அசாம் 5 ரன்களிலும் ஃபக்ஹர் ஜமான் ரன்கள் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 22 ரன்களுக்கு 2 விக்கெட் என பாகிஸ்தான் நெருக்கடிக்கு உள்ளானது. எனினும், முகமது ரிஸ்வான் ஒருபக்கம் சிறப்பாக விளையாடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். 47 பந்துகளில் அரை சதம் கடந்த ரிஸ்வான் அடுத்த பந்திலேயே பிடி கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

ஹசரங்கா ஒரே ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்தி இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார்.

20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் விக்கெட் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...