Newsஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை கிரிக்கெட் அணி

ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை கிரிக்கெட் அணி

-

ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பையின் இறுதி போட்டி துபாயில் நடைபெற்றது. இதில், நாணய சுழற்சியல் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிஷங்கா, மெண்டீஸ் ஆகியோர் களமிறங்கினர். ஓட்டம் எதுவும் எடுக்காமலேயே மெண்டீஸும் 8 ஓட்டங்களில் நிஷங்காவும் ஆட்டமிழந்தனர்.

தனஞ்செயா டி சில்வா 28 ஓட்டங்களில் ஆட்டம் இழந்த நிலையில், குணாதிலக, ஷனகா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால், 58 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இலங்கை அணி பின் தங்கிய நிலையில் இருந்தது. எனினும் அடுத்ததாக களம் இறங்கிய பனுகா ராஜபக்சே அதிரடியாக விளையாடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அணியின் ஸ்கோர் 116 ரன்னாக இருந்த போது ஹசரங்கா 36 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 170 ரன்கள் எடுத்தது.

171 ஓட்டங்கள் எடுத்தால் கோப்பை என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. மதுஷன் பந்துவீச்சில் பாபர் அசாம் 5 ரன்களிலும் ஃபக்ஹர் ஜமான் ரன்கள் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 22 ரன்களுக்கு 2 விக்கெட் என பாகிஸ்தான் நெருக்கடிக்கு உள்ளானது. எனினும், முகமது ரிஸ்வான் ஒருபக்கம் சிறப்பாக விளையாடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். 47 பந்துகளில் அரை சதம் கடந்த ரிஸ்வான் அடுத்த பந்திலேயே பிடி கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

ஹசரங்கா ஒரே ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்தி இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார்.

20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் விக்கெட் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...