Newsஆஸ்திரேலியாவுக்கு எலிசபெத் கைப்பட எழுதிய ரகசிய கடிதம் - 63 ஆண்டுகளாகியும்...

ஆஸ்திரேலியாவுக்கு எலிசபெத் கைப்பட எழுதிய ரகசிய கடிதம் – 63 ஆண்டுகளாகியும் திறக்கப்படவில்லை

-

இங்கிலாந்தின் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் தனது கைப்பட ஆஸ்திரேலியா நாட்டுக்கு ரகசிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடந்த 1986ஆம் ஆண்டு நவம்பரில் இந்த கடிதம் எழுதியுள்ளார். அதில், சிட்னி நகர மக்களின் முகவரியை குறிப்பிட்டு அனுப்பியுள்ளார்.

எனினும், இந்த கடிதம் சிட்னி நகரில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடம் ஒன்றில் விலை மதிப்புடைய பொருட்களை வைக்க கூடிய அறையில் வைத்து பூட்டி பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி செவன் நியூஸ் ஆஸ்திரேலியா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ராணியின் தனிப்பட்ட ஊழியர் உள்பட ஒருவருக்கும் அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டு உள்ளது என்பது பற்றி தெரியாது.

ஏனெனில் அந்த கடிதம் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஒரு விசயம் நிச்சயம். 2085-ம் ஆண்டு வரை அதனை திறந்து பார்க்க முடியாது. ஏனெனில், அந்த கடிதத்தில் சிட்னி நகர மேயரை குறிப்பிட்டு, வருகிற 2085-ம் ஆண்டு, நீங்கள் தேர்வு செய்ய கூடிய ஒரு நல்ல நாளில், தயவு கூர்ந்து இதனை திறக்கவும்.

அதில் உள்ள எனது செய்தியை சிட்னி நகர மக்களுக்கு தெரிவிக்கவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் எலிசபெத் ஆர் என எளிமையான முறையில் கையெழுத்து இடப்பட்டு உள்ளது.

Latest news

சிட்னி பெண் மீது தீவிரவாத சமூக ஊடக விளம்பர குற்றச்சாட்டு

வன்முறை தீவிரவாதத்தை ஊக்குவிக்க சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தியதாகவும், அவரது மொபைல் போனில் டஜன் கணக்கான தொடர்புடைய கோப்புகளை வைத்திருந்ததாகவும் சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண்...

பெற்றோரைப் பலிகொடுத்து குழந்தைகளுக்கு உதவுகிறதா AI?

AI கல்வி தொழில்நுட்ப செயலிகள் குழந்தைகளை கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் அதே வேளையில், பெற்றோர்கள் தங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் தகவல்களில் கவனமாக இருப்பது அவசியம்...

விக்டோரியாவில் மூடப்படும் மற்றொரு மருத்துவ வசதி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சமூக சுகாதார அமைப்புகளில் ஒன்றான Cohealth, இந்த ஆண்டு இறுதியில் அதன் பொது மருத்துவர் சேவைகளை மூட முடிவு செய்துள்ளது. நிதி சிக்கல்கள் காரணமாக...

ஆஸ்திரேலியாவில் மூன்று மடங்காக அதிகரித்துள்ள சைபர் குற்றங்கள்

ஆஸ்திரேலியாவில் பெரிய வணிகங்களுக்கு எதிரான சைபர் குற்றம் ஒரு வருடத்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. சைபர் குற்றங்களால் சில வணிகங்கள் ஆண்டுக்கு $200,000...

சந்தேகத்திற்கிடமான பொட்டலம் காரணமாக Australia Post ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி

இரண்டு தபால் வரிசைப்படுத்தும் மையங்களில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஐந்து ஆஸ்திரேலிய தபால் ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குயின்ஸ்லாந்தின் Townsville West End-இல் உள்ள...

ஆஸ்திரேலியாவில் மேலும் அதிகரிக்கும் காட்டுத்தீ அபாயம்

காலநிலை மாற்றம் காரணமாக கடுமையான காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. "காட்டுத்தீ நிலை" என்று தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கை, காட்டுத்தீ...