பாலி தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தட்டம்மை தடுப்பூசியைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
குயின்ஸ்லாந்து சுகாதார அதிகாரிகள் Cairns நகரில் இரண்டாவது தட்டம்மை நோயை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த நோயாளி, பாலியில் இருந்து திரும்பிய முதல் நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பதும், தடுப்பூசி போடப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களாக Mad Monkeys Waterfront backpackers, Rufus Restaurant மற்றும் Cairns GP Superclinic ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் தட்டம்மை அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.
பாலி, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவில் தற்போது தட்டம்மை நோய் பரவி வருவதாக கெய்ர்ன்ஸ் பொது சுகாதார பிரிவு இயக்குநர் Jacqueline Murdoch கூறுகிறார்.
வரும் மாதங்களில் பாலி அல்லது ஆசிய நாடுகளுக்குப் பயணிக்கத் திட்டமிடுபவர்கள், தட்டம்மை தடுப்பூசியைப் பெற்றுள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்த தங்கள் குடும்ப மருத்துவரிடம் சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தட்டம்மை என்பது இருமல் மற்றும் தும்மல் மூலமாகவோ அல்லது மூக்கு அல்லது வாயிலிருந்து வரும் சுரப்புகளுடன் நேரடி தொடர்பு மூலமாகவோ பரவும் ஒரு தொற்று வைரஸ் ஆகும்.
பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்ட 7 முதல் 10 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தோன்றத் தொடங்கலாம். சில சமயங்களில் மூன்று வாரங்கள் வரை ஆகலாம்.
தட்டம்மை தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு அல்லது ஏற்கனவே அதைப் பெற்றவர்களுக்கு இந்த நோய் பரவும் வாய்ப்பு மிகக் குறைவு என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.