மெல்பேர்ணை பசுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக மாற்ற விக்டோரியன் அரசாங்கம் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.
மெல்பேர்ண் முழுவதும் 500,000 புதிய மரங்களை நடுவதற்கு 9.5 மில்லியன் டாலர்கள் செலவாகும்.
Ardeer South தொடக்கப்பள்ளியில் நடந்த ஒரு பயிலரங்கு ஒன்றில் சுற்றுச்சூழல் அமைச்சர் Steve Dimopoulos மற்றும் திட்டமிடல் அமைச்சர் Sonya Kilkenny ஆகியோர் புதிய முயற்சிகளை அறிவித்தனர்.
காற்றின் தரத்தை மேம்படுத்துதல், அதிக நிழலை உருவாக்குதல் மற்றும் சுற்றுச்சூழலை குளிர்வித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, Ardeer South தொடக்கப்பள்ளி ஏற்கனவே 1,800க்கும் மேற்பட்ட மரங்களை நடுவதில் பங்களித்துள்ளது.
இந்தத் திட்டம் மெல்பேர்ணில் மேலும் மரங்கள் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது. மேலும் மரங்கள் குறைவாகவும் அதிக வெப்பநிலையுடனும் உள்ள பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் Steve Dimopoulos தெரிவித்தார்.
இன்று முதல் மாநிலம் முழுவதும் உள்ள மரங்களுக்கு வலுவான பாதுகாப்பு செயல்படுத்தப்படும் என்றும், குடியிருப்பு நிலங்களில் 5 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள மரங்களை அகற்ற அனுமதி பெற வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
மெல்பேர்ணில் மேலும் மரங்கள் திட்டம் உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் நில மேலாளர்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. அவர்கள் அடுத்த ஆண்டு பெரிய நிதிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.