மெல்பேர்ணைச் சேர்ந்த ஒரு தாய், தனது குழந்தை அலட்சியத்தால் இறந்ததை அடுத்து, மருத்துவர்களிடம் கருணையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குழந்தைகளின் நோய்களைப் பற்றி விளக்கும்போது பெற்றோர்கள் சொல்வதை ‘உண்மையிலேயே கேட்க வேண்டும்’ என்று அவர் மருத்துவர்களை வலியுறுத்தியுள்ளார்.
தனது மூன்று வயது குழந்தையை சொறி மற்றும் காய்ச்சல் காரணமாக மெல்பேர்ண் மோனாஷ் மருத்துவ மையத்திற்கும் ஒரு தனியார் மருத்துவருக்கும் பல முறை அழைத்துச் சென்ற போதிலும், குழந்தைக்கு சரியான சிகிச்சை கிடைக்கவில்லை என்று அவர் மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.
இறந்த குழந்தை மனவளர்ச்சி குன்றியதாகவும், நோயின் சிக்கல்களை விளக்க முடியவில்லை என்றும் தாய் கூறியுள்ளார்.
இருப்பினும், மருத்துவர்கள் ஒருபோதும் தனது பேச்சைக் கேட்கவில்லை என்று கூறும் தாய், குழந்தைக்கு வலி நிவாரணிகளைக் கொடுக்கவும், காய்ச்சல் குறையும் வரை காத்திருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகக் கூறியுள்ளார்.
இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தை சரியான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை இல்லாததால் இறந்ததாகவும், Sepsis ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
மோனாஷ் மருத்துவ மையத்தைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவரும் இரண்டு மருத்துவர்களும் இறந்த குழந்தை மற்றும் அவரது தாய்க்கு போதுமான கவனிப்பை வழங்கவில்லை என்று விக்டோரியன் துணை மாநில மரண விசாரணை அதிகாரி பரேசா ஸ்பானோஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.