Newsரஷ்யாவிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய இலங்கை

ரஷ்யாவிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய இலங்கை

-

ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமை ஒரு பாரிய தவறு எனவும் இது மீண்டும் நடக்காது என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்றும் போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஊடகமொன்றுக்கு நேற்று வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த ஜூன் 2 ஆம் திகதி அன்று இலங்கையில் ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தடுத்துவைக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பந்து குணவர்தன, “அது ஒரு பாரிய தவறு, அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.

இந்த சம்பவம் முற்றாகத் தீர்க்கப்பட்டதாக அமைச்சர் உறுதியளித்தார்.

“இலங்கையில் மீண்டும் ஒருபோதும் நடக்காது என்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் ஆகிய தரப்புகள் உத்தரவாதம் அளிக்கின்றன.

இலங்கையில் எந்த விமானத்தையும் தடுத்து வைக்க நாங்கள் விரும்பவில்லை” என அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

Latest news

ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஏற்படும் வானிலை மாற்றங்கள்

வரும் நாட்களில் அடிலெய்டு, சிட்னி, மெல்போர்ன் மற்றும் ஹோபார்ட் பகுதிகளுக்கு வெப்பமான வானிலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அடிலெய்டைச் சுற்றியுள்ள வெப்பநிலை 30 டிகிரி...

ஈஸ்டர் விடுமுறை நாட்களில் மேலும் அதிகரிக்கும் நீரில் மூழ்கி இறக்கும் போக்கு

ஈஸ்டர் விடுமுறை நாட்களில் ஆஸ்திரேலியாவில் ஐந்தாவது நீரில் மூழ்கி மரணம் பதிவாகியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரையில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் இன்று அடித்துச்...

Werribee-இல் பிறந்த சிங்கக் குட்டிக்கு ஏற்பட்ட சோகம்

விக்டோரியாவில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் பிறந்த சிங்கக் குட்டி இறந்ததாக கூறப்படுகிறது. 'பிரீசியஸ்' என்று பெயரிடப்பட்ட இந்த குட்டியின் இறப்புக்குக் காரணம், பெண் சிங்கம் எதிர்பாராத விதமாக...

வேட்டையாட சென்ற இடத்தில் விபரிதம் – தந்தையை சுட்ட மகன்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய டேபிள்லேண்ட்ஸில் வேட்டையாடச் சென்றிருந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 70 வயதான தந்தையும் 47 வயது மகனும் இன்று காலை வேட்டையாடிக் கொண்டிருந்ததாக...

ஆஸ்திரேலியாவில் நிதி மோசடியால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா?

ஆஸ்திரேலியர்களில் 10 பேரில் ஒருவர் அட்டை மோசடியை அனுபவித்துள்ளதாக சமீபத்திய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் நடத்திய கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. கிரெடிட்...

மெல்பேர்ணில் காணாமல் போன குழந்தை

விக்டோரியாவில் உள்ள டான்டெனாங் மலைத்தொடரில் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன ஒரு குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் மெல்போர்னில் உள்ள ஒலிண்டா பிளேஸ்பேஸில் விளையாடிக்...