News“சரியாக நடக்காவிட்டால் அழிக்கப்படுவார்கள்” என ஹமாஸ் அமைப்பினருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

“சரியாக நடக்காவிட்டால் அழிக்கப்படுவார்கள்” என ஹமாஸ் அமைப்பினருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

-

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

இந்த அமைதி ஒப்பந்தமானது, கடந்த 13ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் எகிப்து ஜனாதிபதி அல் சிசி தலைமையில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் கையெழுத்தானது.

ஒப்பந்தம் கையெழுத்தான பின்பும் ஹமாஸ் அமைப்பு மற்றும் இஸ்ரேல் படைகளுக்கிடையில் காஸாவில் தொடர் மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு தொடர்ந்து மீறி வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பில், செய்தியாளர்களுக்கு பதிலளித்த ட்ரம்ப்,

“அவர்கள் சரியாக நடந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள். அவர்கள் இதையே செய்து கொண்டிருந்தால் நாங்கள் உள்ளே சென்று சரிசெய்ய வேண்டியிருக்கும். அது விரைவாகவும் வன்முறையான முறையிலும் நடக்கும்.

நான் கேட்டுக்கொண்டால் இஸ்ரேல் இரண்டு நிமிடங்களில் அங்கே செல்வார்கள். என்னால் அவர்களிடம் உள்ளே சென்று அதைப் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூற முடியும். ஆனால், இப்போது நான் அதைக் கூறவில்லை. ஒரு சிறிய வாய்ப்பு கொடுக்கப் போகிறோம்” எனத் தெரிவித்தார்.

Latest news

மசாஜ் சலூனில் விசித்திரமாக நடந்து கொண்ட ஒருவர் பணிநீக்கம்

குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்...

போலி ரேபிஸ் தடுப்பூசிகள் பற்றி எச்சரிக்கை

Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த...

சட்டவிரோத குடியேறிகள் தானாக வெளியேறினால் சன்மானம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன...

Bondi பயங்கரவாதத் தாக்குதலின் நாயகர்களைத் தேடி சிறப்பு கௌரவ விருதுகள்

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட மாவீரர்களுக்கு சிறப்பு மரியாதைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்தார். நேற்று காலை கான்பெராவில் ஊடகங்களுக்குப் பேசிய அல்பானீஸ், புதிய சிறப்பு...

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் அணு மின் நிலையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம், சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன்...

விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் கடைகள் திறக்கும் நேரம்

நீங்கள் பொருட்கள் வாங்க வேண்டிய இடங்கள், அடுத்த சில நாட்களில் திறந்திருக்கும் திகதிகள் மற்றும் நேரங்களை நாங்கள் உங்களுக்குத் தெரிவித்துள்ளோம். கிறிஸ்துமஸ் தினம், Boxing தினம் மற்றும்...