News“சரியாக நடக்காவிட்டால் அழிக்கப்படுவார்கள்” என ஹமாஸ் அமைப்பினருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

“சரியாக நடக்காவிட்டால் அழிக்கப்படுவார்கள்” என ஹமாஸ் அமைப்பினருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

-

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

இந்த அமைதி ஒப்பந்தமானது, கடந்த 13ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் எகிப்து ஜனாதிபதி அல் சிசி தலைமையில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் கையெழுத்தானது.

ஒப்பந்தம் கையெழுத்தான பின்பும் ஹமாஸ் அமைப்பு மற்றும் இஸ்ரேல் படைகளுக்கிடையில் காஸாவில் தொடர் மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு தொடர்ந்து மீறி வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பில், செய்தியாளர்களுக்கு பதிலளித்த ட்ரம்ப்,

“அவர்கள் சரியாக நடந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள். அவர்கள் இதையே செய்து கொண்டிருந்தால் நாங்கள் உள்ளே சென்று சரிசெய்ய வேண்டியிருக்கும். அது விரைவாகவும் வன்முறையான முறையிலும் நடக்கும்.

நான் கேட்டுக்கொண்டால் இஸ்ரேல் இரண்டு நிமிடங்களில் அங்கே செல்வார்கள். என்னால் அவர்களிடம் உள்ளே சென்று அதைப் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூற முடியும். ஆனால், இப்போது நான் அதைக் கூறவில்லை. ஒரு சிறிய வாய்ப்பு கொடுக்கப் போகிறோம்” எனத் தெரிவித்தார்.

Latest news

விர்ஜின் ஆஸ்திரேலியாவில் இருந்து விடுமுறைக்கு ஒரு சிறந்த வாய்ப்பு

விர்ஜின் ஆஸ்திரேலியா தனது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான விமான விருப்பங்களை வழங்குவதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகளின் விலைகளைக் குறைத்துள்ளது. அதன்படி, 27 ஆம் திகதி நள்ளிரவு...

விக்டோரியாவில் கார் காப்பீட்டு செலவுகள் அதிகரிப்பதற்கான காரணங்கள்

விக்டோரியாவின் மெல்பேர்ணில் தொடர்ந்து வாகனத் திருட்டுகள் நடப்பதால் வாகன காப்பீட்டு விகிதங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மெல்பேர்ண் காப்பீட்டு நிறுவனங்களில் மோட்டார் காப்பீட்டு கோரிக்கைகள் கடந்த ஆண்டை விட...

ராணுவ விமான விபத்து தொடர்பாக ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ள சீனா

தென் சீனக் கடலில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய P-8 கண்காணிப்பு விமானத்தின் மீது சீன PLA Su-35 போர் விமானம் ஒன்று தீப்பிடித்து...

காலியான அலமாரிகளுடன் காட்சியளிக்கும் பல்பொருள் அங்காடிகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள Woolworths மற்றும் Coles பல்பொருள் அங்காடிகளின் அலமாரிகளில் உருளைக்கிழங்கு பற்றாக்குறை இருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து நுகர்வோர் மத்தியில்...

ராணுவ விமான விபத்து தொடர்பாக ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ள சீனா

தென் சீனக் கடலில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய P-8 கண்காணிப்பு விமானத்தின் மீது சீன PLA Su-35 போர் விமானம் ஒன்று தீப்பிடித்து...

மெல்பேர்ணில் திடீரென மூடப்படும் பல உணவகங்கள்

மெல்பேர்ண் நகர மையத்தில் உள்ள பிரபலமான "Tokyo ramen" உணவகம் உட்பட பல உணவகங்கள் வெடிகுண்டு மிரட்டல் அடங்கிய மின்னஞ்சலைப் பெற்றதை அடுத்து மூடப்பட்டுள்ளன. மிகவும் பிரபலமான...