Newsகரீபியன் தீவுகள் நோக்கி மிகப்பெரிய போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா

கரீபியன் தீவுகள் நோக்கி மிகப்பெரிய போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா

-

USS Gerald R Ford எனப் பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 90 விமானங்கள் வரை கொண்டு செல்லக்கூடிய மிகப்பெரிய அமெரிக்க போர்க் கப்பல் இதுவாகும்.

அண்மைக் காலமாக கரீபியன் தீவுகளில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை அதிகரித்து வருவதாகவும் இதில் மேலும் 8 போர்க் கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் F-35 விமானங்கள் போன்றவையும் உள்ளடங்குவதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கப்பலானது, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா அத்துடன் கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அமெரிக்காவின் தெற்கு கட்டளைப் பிராந்தியத்துக்கு அனுப்பப்படுவதாக பென்டகன் அறிவித்துள்ளது.

சமீபகாலமாக, சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. கரீபியன் தீவுகளில் போதைப்பொருள் கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட படகு மீது ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதலே அதன் மிக சமீபத்திய தாக்குதலாகும்.

இந்தத் தாக்குதலில் படகில் இருந்த 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், கடந்த மாதம் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை ஆரம்பித்ததில் இருந்து இலக்கு வைக்கப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 10 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆகவும் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

Centrelink ஆஸ்திரேலியர்களுக்கு அதிகமாகச் செலுத்திய சலுகைகள்

ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு Centrelink அதிக சலுகைகளை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. சில தனிநபர்களுக்கு $20,000 க்கும் அதிகமாக ஊதியம் வழங்கப்பட்டதாக Guardian Australia அறிக்கை குறிப்பிடுகிறது. தானியங்கி BPay...

ஆஸ்திரேலியாவில் வார இறுதியில் மாற்றமடையும் வானிலை

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியா முழுவதும் பல்வேறு வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் ஒரே நேரத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் வெப்ப அலைகள்...

குயின்ஸ்லாந்தில் வீட்டில் சமைக்கப்பட்ட உணவில் எலி விஷம் – ஐவர் மருத்துவமனையில் அனுமதி

குயின்ஸ்லாந்தின் Logan-இல் இருந்து வீட்டில் சமைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் எலி விஷத்தால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் பதிவாகியுள்ளன. இதன் விளைவாக Logan பகுதியில் ஒரு குழந்தை உட்பட...

பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திட்டம்

Horsham CBD-யில் பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டம் நவம்பர் 5 முதல் தொடங்கும். சாலைப் போக்குவரத்து விபத்து ஆணையமும் Active Transport Fund-உம் இந்தத் திட்டத்திற்கு...

குயின்ஸ்லாந்தில் வீட்டில் சமைக்கப்பட்ட உணவில் எலி விஷம் – ஐவர் மருத்துவமனையில் அனுமதி

குயின்ஸ்லாந்தின் Logan-இல் இருந்து வீட்டில் சமைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் எலி விஷத்தால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் பதிவாகியுள்ளன. இதன் விளைவாக Logan பகுதியில் ஒரு குழந்தை உட்பட...

வேலைநிறுத்தத்தால் ATM-களில் இருந்து பணம் எடுக்க முடியவில்லை

விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவில் உள்ள Armaguard மற்றும் Prosegur நிறுவனங்களுக்கான பண விநியோக ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம், ஊதியம் மற்றும் பாதுகாப்புத் தரங்களில்...