Sydneyசிட்னியில் சுட்டுக் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரி ஒரு இந்தியாரா?

சிட்னியில் சுட்டுக் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரி ஒரு இந்தியாரா?

-

சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரையில் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளில் ஒருவர் இந்தியக் கடவுச்சீட்டைக் கொண்டவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Bondi கடற்கரையில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 50 வயதுடைய துப்பாக்கிதாரி இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

அவர் கடந்த 30 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த நிலையில், இந்தியக் கடவுச்சீட்டையே வைத்திருந்துள்ளார்.

யூதர்களின் ‘Hanukkah’ பண்டிகை கொண்டாட்டத்தின் போது, குறித்த நபரும் அவரது மகனுமே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிதாரிகளில் ஒருவரை வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் துணிச்சலாகப் பின்னால் இருந்து தாக்கி, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்துள்ளார்.

இதன்போது கைகளில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தத் கொடூரத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியப் புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பெர்த்தில்  நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய 18 வயது நபர் மீது குற்றம்

பெர்த்தின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நாஜி சின்னம் அணிந்திருந்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்து குற்றம்...

NSWவில் வாகனம் மோதி இறந்த பெண் – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சனிக்கிழமை இரவு Maroochydore-இல் வேண்டுமென்றே வாகனத்தை மோதிவிட்டு ஓடியதாகக் கூறப்படும் விபத்தில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Guilherme Dal...