Newsஆஸ்திரேலியாவில் ஆளில்லா விமானத்தினால் ஏற்பட்ட விபரீதம் - ஆயிர கணக்கானோர் பாதிப்பு

ஆஸ்திரேலியாவில் ஆளில்லா விமானத்தினால் ஏற்பட்ட விபரீதம் – ஆயிர கணக்கானோர் பாதிப்பு

-

ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் மின்சார தடையால் தவித்துள்ளார்கள்.

உணவு விநியோகம் செய்யும் ஆளில்லா விமானம் மின் வலையமைப்பில் மோதியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை பிரவுன்ஸ் ப்ளைன்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் தெற்கு பிரிஸ்பேனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் இவ்வாறு மின்சார தடையால் பாதிக்கப்பட்டார்கள்.

குறித்த சம்பவம் முதல் முறை இடம்பெற்றுள்ளதாக மின் வலையமைப்பிற்கு பொறுப்பான குயின்ஸ்லாந்து எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மின் வலையமப்பு நிறுவனம் 2,000 பேருக்கு 45 நிமிடங்களில் மின் தடையை சரி செய்துள்ளது.

இருப்பினும் ஆளில்லா விமானம் மோதிய இடத்திற்கு அருகில் இருந்தவர்களுக்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கு பிறகே மின்சாரம் கிடைத்துள்ளது.

சிரமத்திற்கு வருந்துகிறோம். நாங்கள் தற்போது நேற்றைய நிகழ்வை மதிப்பாய்வு செய்து வருகிறோம், ” என உணவு சேவை தெரிவித்துள்ளது.

Latest news

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள்

இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்கள், ரோமானிய காலத்தைச் சேர்ந்த, தங்கத்தை விட அதிக மதிப்புள்ள ஊதா நிறப் பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் . இங்கிலாந்திலுள்ள Carlisle என்னுமிடத்தில் நடந்துவந்த...

6 நாட்களாக அமேசான் பொதிக்குள் சிக்கியிருந்த பூனை

அமெரிக்காவின் உடா மாநிலத்தில் அமேசான் நிறுவனத்தின் மூலம் இணையத்தில் பொருட்களை வாங்கிய தம்பதியர், சில பொருட்களை திருப்பி அனுப்ப பொதி செய்த போது பெட்டிக்குள் தங்கள்...

வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையும் – ஆஸ்திரேலிய ஆய்வில் தகவல்

உடல் பருமனை கட்டுப்படுத்த வாழைப்பழம் மிகவும் பொருத்தமான பழம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் வாழைப்பழம், வெண்ணெய், கீரை, தக்காளி மற்றும் கேரட் போன்றவற்றை அதிகம்...

10 சதவீதத்தால் குறைந்துள்ள iPhone விற்பனை

உலகின் மிகவும் பிரபலமான போன் மாடலான ஐபோன் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது. இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையை பாதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இது...

அவுஸ்திரேலியாவில் பணியாற்றிய இரண்டு வெளிநாட்டு உளவாளிகளை நாடு கடத்த முடிவு

அவுஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்த இரண்டு வெளிநாட்டு உளவாளிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் இவர்கள் இரகசியமாக நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உளவாளிகள் இருவர்...

ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான 10 கார்கள்

ஏப்ரல் மாத வாகன விற்பனை அறிக்கையின்படி, ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான 10 கார்கள் பெயரிடப்பட்டுள்ளன. பெடரல் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் 97,202...