நியூ சவுத் வேல்ஸில் உள்ள Lake Cargelligo-இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொவிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இடத்தில் மர்ம நபரொருவர் நடத்திய இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இரு பெண்கள் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொலிஸாரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பகிரங்கமாக அடையாளம் காணப்படவில்லை. மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையிலான உறவு குறித்து ஹாலண்ட் கருத்து தெரிவிக்க மாட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





