ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி நாடாளுமன்றம் கூடியபோது, சுயேச்சை செனட்டர் Lidia Thorpe இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கலந்து கொண்ட பேரணியில் குண்டு வீச முயற்சித்தது. அந்த மக்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதை தெளிவாகக் குறிக்கிறது என்று அவர் கூறுகிறார்.
ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த முதல் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களைக் கவனித்துக்கொள்வதற்கும் மத்திய அரசுக்கு ஒரு பொறுப்பு இருப்பதாக அவர் மேலும் கூறுகிறார்.
ஜனவரி 26 ஆம் திகதி பெர்த்தில் நடந்த படையெடுப்பு தின பேரணியில் வீட்டில் தயாரிக்கப்பட்ட குண்டு வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது வெடிக்கவில்லை.
அந்த நேரத்தில், போலீசார் பேரணியைக் கலைக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் வெடிகுண்டைக் கொண்டு வந்த 31 வயது நபர் கைது செய்யப்பட்டார்.





