நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட ஏராளமான விலங்குகள் மற்றும் $85,000 க்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக 39 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது வீடு “தற்காலிக மிருகக்காட்சிசாலையாக” பயன்படுத்தப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
1.3 மீட்டர் நீளமுள்ள முதலை, 38 பாம்புகள், மூன்று முள்ளம்பன்றிகள், 28 நாய்கள் மற்றும் ஒன்பது பூனைகள் அங்கு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 52 ஹைட்ரோபோனிக் சணல் செடிகள், 11 கிலோகிராம் சணல் மற்றும் ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வணிக ரீதியான கஞ்சா சாகுபடி, சட்டவிரோத விலங்குகளை வைத்திருத்தல் மற்றும் துப்பாக்கி குற்றங்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. மேலும் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
இருப்பினும், அனைத்து விலங்குகளும் பாதுகாப்பாக அகற்றப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.





