Breaking Newsஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊடுருவல் - Singtelஇன் துணை நிறுவனம் பாதிப்பு

ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊடுருவல் – Singtelஇன் துணை நிறுவனம் பாதிப்பு

-

ஆஸ்திரேலியாவில் செயல்படும் சிங்கப்பூர்த் தொலைத்தொடர்பு நிறுவனமான Singtelஇன் துணை நிறுவனத்தில் ஊடுருவல் இடம்பெற்றுள்ளது.

Singtel நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஊடுருவப்படுவது இது இரண்டாம் முறையாகும். அதன் தொடர்பில், Singtel நிறுவனத்தை இலக்காகக் கொண்டு அதன் மீது இணையத் தாக்குதல் நடத்தப்படுகிறதா என்பது குறித்துக் கேள்வி எழுந்துள்ளது.

Singtel இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் Dialog எனும் தகவல்தொடர்புச் சேவை ஆலோசனை நிறுவனத்தை வாங்கியது. Dialog ஊடுருவப்பட்டதில் 20க்கும் குறைவான வாடிக்கையாளர்களும் சுமார் 1,000 தற்போதைய, முன்னாள் ஊழியர்களும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

சென்ற மாதம் 10ஆம் தேதியன்றும் இம்மாதம் 7ஆம் தேதியன்றும் ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றன. அதில் Dialog நிறுவனத்தின் தரவுகளில் சிறிதளவு ஊடுருவப்பட்டு Dark Web எனும் ரகசிய இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

Singtel நிறுவனத்தின் இன்னொரு துணை நிறுவனமான ஆஸ்திரேலியாவின் Optus நிறுவனமும் இணையத்தாக்குதலால் பாதிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வரலாற்றில் இடம்பெற்ற ஆகப் பெரிய ஊடுருவல் சம்பவங்களில் அதுவும் ஒன்று. அதில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டன.

Latest news

அழகுசாதன சிகிச்சைகளால் ஆபத்தின் விளிம்பில் உள்ள பெண்கள்

முக சுருக்கங்களைக் குறைக்க அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களில் பல பெரும் ஆபத்தில் உள்ளனர். முக சுருக்கங்களைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் Toxpia தடுப்பூசியால் விஷம் குடித்த பிரிட்டிஷ்...

தாமதமாகும் அறுவை சிகிச்சைகள் – கவலை கொண்டுள்ள NSW சுகாதார அமைச்சர்

தாமதமான அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருவது குறித்து நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அமைச்சர் கவலை கொண்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாநில மருத்துவமனைகளில்...

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு வீட்டுவசதித் துறையை எவ்வாறு பாதிக்கும்?

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வட்டி விகிதக் குறைப்பு, வீட்டுவசதி கட்டுமானத் துறையில் "அதிக நம்பிக்கையை" ஏற்படுத்தியுள்ளது என்று வீட்டுவசதி தொழில் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஜோசலின்...

டிரம்பை எதிர்க்க புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார் எலான் மஸ்க்

கோடீஸ்வரர் எலோன் மஸ்க் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாகக் கூறியுள்ளார். தனது சமூக ஊடக தளமான X இல் ஒரு அறிவிப்பில், அவர் அமெரிக்க கட்சியை உருவாக்கியுள்ளதாகவும்,...

குயின்ஸ்லாந்தில் வீதியில் தீப்பிடித்து எரிந்த இரசாயன லாரி

குயின்ஸ்லாந்தில் ரசாயனங்கள் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Charleville-இற்கு தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Bakers Bend-இல்...

ஆஸ்திரேலியா சுதந்திரமாக இருக்க வேண்டும் – அல்பானீஸ் வலுவான அறிக்கை

ஆஸ்திரேலியா அமெரிக்காவிலிருந்து பிரிந்து சுதந்திரம் பெற முயற்சிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது உரையில் தெளிவுபடுத்தியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நேற்று சிட்னியில் ஒரு முக்கிய...