Newsஆஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு மழை வெள்ள எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு மழை வெள்ள எச்சரிக்கை!

-

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதி மழையையும் வெள்ளத்தையும் எதிர்கொள்ளத் தயாராகிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மர்ரே ஆற்றின் (The Murray) அருகே வசித்துவரும் குடியிருப்பாளர்கள் உடனடியாக வீடுகளைவிட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளனர்.

விக்டோரியா (Victoria), நியூ சௌத் வேல்ஸ் (New South Wales), தெற்கு ஆஸ்திரேலியா (South Australia)ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாக மர்ரே ஆறு செல்கிறது.

இன்று பின்னேரத்தில் அந்த ஆறு கரை புரளும் என்று நெருக்கடிக்காலச் சேவைப் பிரிவு எச்சரித்துள்ளது.

அப்போது கடல் மட்டத்திலிருந்து 95 மீட்டர் உயரத்திற்கு ஆற்று நீரின் அளவு பெருகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுவரை இல்லாத வகையில் ஏற்படக்கூடிய வெள்ளத்தை எதிர்கொள்ள விக்டோரியா மாநிலத்தின் எச்சுக்கா (EH-CHOO-KA) நகர குடியிருப்பாளர்கள் ஆயத்தமாகிவருகின்றனர்.

ஆற்று நீர், நகரின் வீதிகளுக்குள் புகுந்துள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese), வெள்ள நிவாரணப் பணிகளில் கைகொடுக்க, சுமார் 500 தற்காப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...